அருள்மிகு நரசிம்மேஸ்வரர் ஆலயம், ஐயம்பேட்டைசேரி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கப்படும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்துக்கு அடுத்த காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் கிளைசாலையின் வலப்பக்கமாக 7 கிமி பயணித்தல் ஐயம்பேட்டைசேரி கிராமம் வரும். இங்கிருந்து வலது பக்கமாக செல்லும் சாலையில் 1 கிமி தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.
தற்போதய பெயர் : ஐயம்பேட்டைசேரி ( பழைய பெயர் : தியாகமுகசேரி,திசைமுகசேரி)
இறைவன் : நரசிம்மேஸ்வரர்
இறைவி : மரகதவல்லி
தலமரம் : வன்னி
தரிசன நேரம் : காலை 6 மணிமுதல் 12 மணி வரை, மாலை 4 மணிமுதல் 7.30 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
திசைமுகன் என்பது பிரம்மாவைக் குறிக்கும். பிரம்மனின் விருப்பப்படி அவருக்கு திருமால் பரமபதநாதராக இந்தத் திருத்தலத்தில் காட்சி கொடுத்ததால் திசைமுகச்சேரி என இத்தலத்திற்கு பெயர் ஏற்பட்டது.நரசிம்மமூர்த்தி இரண்யனை வதம் செய்தபிறகு , இரண்யனின் உயிரற்ற உடலைக் கழுத்தில் மாலையாக போட்டபடி சுழன்று உக்கிரத்துடன் ஆடினார். ஈஸ்வரன் நரசிம்மர் முன் சரபராக வடிவெடுத்து அவரை அமைதிபடுத்தினார். தன்னை சாந்தம்படுத்திய ஈஸ்வரனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அங்கேயே ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிப்பட்டார். இது நடந்தது இத்தலத்தில் தான்.அதனால் தான் ஈஸ்வருக்கு நரசிம்மேஸ்வரர் என திருநாமமும் ஏற்பட்டது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
Sunday, March 15, 2009
[+/-] |
அருள்மிகு நரசிம்மேஸ்வரர் ஆலயம், ஐயம்பேட்டைசேரி |
Sunday, March 8, 2009
[+/-] |
அருள்மிகு ஐராவதேஸ்வரர் ஆலயம், அத்திமுகம் |
அருள்மிகு ஐராவதேஸ்வரர் ஆலயம், அத்திமுகம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கப்படும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
ஓசூரிலிருந்து சுமார் 22 கி.மீ தூரம் , ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 7 கி.மீ பயணித்தபின் இடப்பக்கம் செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ தூரம் செல்ல வேண்டும்.
தற்போதய பெயர் : அத்திமுகம் ( பழைய பெயர் : ஹஸ்தி முகம்)
இறைவன் : ஐராவதேஸ்வரர் , அழகேஸ்வரர்
இறைவி : காமாட்சி அம்பாள் , அகிலாண்டவல்லி அம்பாள்
தலமரம் : வன்னி
தரிசன நேரம் : காலை 6 மணிமுதல் 12 மணி வரை, மாலை 4 மணிமுதல் 7.30 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
பசுமை பொங்கும் அழகிய கிராமமான அத்திமுகத்தில் தேவர் தலைவனான இந்திரன் தனது வாகனமான ஐராவதத்தில் வந்து இங்கு இறைவனை வழிபட்டதால் இறைவனுக்கு ஐராவதேஸ்வரர் என பெயர் வழங்கலாயிற்று. எனினும் இங்கு மூலவராக அமர்ந்திருப்பவர் அருள்மிகு அகிலாண்டவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ அழகேஸ்வரர் .
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
Saturday, October 11, 2008
[+/-] |
அருள்மிகு நீலமேகப் பெருமாள்,தஞ்சாவூர் |
அருள்மிகு நீலமேகப் பெருமாள்,தஞ்சாவூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
தஞ்சாவூர் நகரைத் தாண்டியதும் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம். இந்த வெண்ணாற்றங்கரையில் இப்போது மூன்று கோவில்கள் உள்ளன. இந்த மூன்று தலங்களிலும் மூன்று பெருமான்கள் எழுந்தருளியுள்ளனர்.மூன்று தலங்கள் இருந்தாலும் ஒரு திவ்யதேசமாகவே மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. இம்மூன்று கோவில்களும் ஒரு பர்லாங் சுற்றளவிற்குள்ளேயே அமைந்துள்ளது.
1. தஞ்சை மாமணிக் கோவில்
மூலவர் : நீலமேகப் பெருமாள்
தாயார் : செங்கமலவல்லி
தீர்த்தம் : கன்னிகா புஷ்கரணி
விமானம் : சௌந்தர்ய விமானம்
2. மணிக்குன்றம்
மூலவர் : மணிக்குன்றப் பெருமாள்
தாயார் : அம்புச வல்லி
தீர்த்தம் : ஸ்ரீ ராம தீர்த்தம்
விமானம் : மணிக்கூட விமானம்
3. தஞ்சையாளி நகர்
மூலவர் : நரசிம்மர்
தாயார் : தஞ்சை நாயகி
தீர்த்தம் : சூர்ய புஷ்கரணி
விமானம் : வேதசுந்தர விமானம்
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 7 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, September 21, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #78 அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோவில், அரித்துவாரமங்கலம் |
அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோவில், அரித்துவாரமங்கலம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
கும்பகோணத்திலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இத்திருத்தலம். தஞ்சாவூர் , கும்பகோணத்திலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதிகள் உண்டு.
இறைவன்: பாதாளேஸ்வரர் (பாதாள வரதர்)
இறைவி: அலங்கார அம்மை
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
தலமரம் : வன்னி
தற்போதைய பெயர் : அரித்துவாரமங்கலம் (திரு அரதை பெரும்பாழி)
பதிகம் : திருஞான சம்பந்தர்
பஞ்சாரண்யத் தலங்களில் மூன்றாவதாக தரிசிக்க வேண்டியது திரு அரதை பெரும்பாழி என்கிற அரித்துவாரமங்கலம் . உச்சி நேரமாகிய 11.00 முதல் 12.30 மணிக்குள் அரித்துவாரமங்கலத்தில் கோயில் கொண்டிருக்கும் அலங்கார அம்மை சமேத பாதாளேஸ்வரரை தரிசிக்க வேண்டும். திருமாலுக்கும் பிரம்மாவிற்கும் யார் பெரியவர் என்று நடந்த போட்டியில் திருமால் வராக அவதாரம் எடுத்து இறைவனின் அடி காண குடைந்து சென்ற இடம் இத்தலம் என்கிறார்கள். இறைவன் கருவறையில் சிவலிங்கத்திற்கு முன் ஒரு பெரிய பள்ளம் உள்ளது. அப்பள்ளத்தை இதற்கு ஆதாரமாக காட்டுகிறார்கள். பாழி என்றால் பள்ளம். இதனால் இத்தலத்திற்கு திரு அரதை பெரும்பாழி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோவில், அரித்துவாரமங்கலம்
Sunday, September 7, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #76 அருள்மிகு புவனேஸ்வரி திருக்கோவில், புதுக்கோட்டை |
அருள்மிகு புவனேஸ்வரி திருக்கோவில், புதுக்கோட்டை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
புதுக்கோட்டை நகரின் மத்தியில் கிழக்கே இவ்வாலயம் அமைந்துள்ளது.
இறைவி: புவனேஸ்வரி , அஷ்ட தச புஜ மகாலட்சுமி
தற்போதைய பெயர் : நவஸாலபுரி என்ற புதுக்கோட்டை
சரஸ்வதி ஞான ரூபம், மகா லட்சுமி கிரியா ரூபம், மகா காளி இச்சா ரூபம். இம்மூன்று பேரும் சேர்ந்து சச்சிதானந்த ரூபிணியாக ,சாமுண்டேஸ்வரி ,புவனேஸ்வரியாக வழிபடப்படுகிறார்கள். புதுக்கோட்டையில் உள்ள இக்கோவிலை அதிஷ்டானம் என்றே அழைக்கிறார்கள். முன்னர் இருந்த ஜட்ஜ் சுவாமிகளும் பின்னர் சாந்தாநந்த சுவாமிகளும் புவனேஸ்வரி விக்கரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். புவனேஸ்வரி பஞ்சரத்ன ஸ்துதியை தினம் பாராயணம் செய்பவர் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Monday, September 1, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #75 அருள்மிகு அபயாம்பிகை ஆலயம், மயிலாடுதுறை |
அருள்மிகு அபயாம்பிகை ஆலயம், மயிலாடுதுறை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
மயிலாடுதுறை நகரின் மத்தியில் மாயூரநாதசுவாமி- அபயாம்பிகை திருக்கோயில் அமைந்துள்ளது.
தற்போதய பெயர் : மயிலாடுதுறை
இறைவன் : மாயூரநாதசுவாமி
இறைவி : அபயாம்பிகை
தீர்த்தம் : பிரம்மதீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:30 மணிமுதல் 8 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
அம்பிகை மயில் உருவத்தில் இறைவனைப் பூஜீத்து திருமணம் செய்து கொண்ட ஸ்தலமாதலால் மயிலாடுதுறை என்று பெயர் பெற்றது. ஐப்பசி மாதத் திருவிழாவின் போது அம்பிகை மயில் உருவமாக வழிப்பட்ட ஐதீக விழா நடைபெறுகிறது. துலா ஸ்னானத்திற்கு புகழ்ப்பெற்றது மயிலாடுதுறை . ஐப்பசி மாதத்து அமாவாசையன்று (தீபாவளி) கங்கை,யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகளும் மயிலாடுதுறையில் காவிரியின் இடப தீர்த்தத்தில் நீராடியதாக ஐதீகம்! இதனால் தீபாவளியன்று காவிரி நீரில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, August 24, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #74 அருள்மிகு லலிதாம்பிகை திருக்கோவில், திருமீயச்சூர் |
அருள்மிகு லலிதாம்பிகை திருக்கோவில், திருமீயச்சூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் திருமீயச்சூர் உள்ளது.
இறைவன்: அருணேஸ்வரர்
இறைவி: லலிதாம்பிகை, சாந்தநாயகி
தீர்த்தம் : சூர்ய தீர்த்தம்
தற்போதைய பெயர் : மீயச்சூர்
காசிப முனிவரின் மகனான அருணனை வஞ்சித்த சூரியன் ,தனது சாபம் தீருவதற்காக மீயச்சூர் வந்து இறைவனை வழிபட்டான். வெகுகாலம் ஆகியும் தனது சாபம் தீராததால் வருத்தத்துடன் " ஹே மிகுரா" என கதறிய போது ஏகாங்தத்தில் இருந்த தேவி கோபமுற , இறைவன் சாந்தப்படுத்துகிறார். சாந்தமடைந்த அன்னை பராசக்தியின் வாயிலிருந்து வசினி என்ற வாக்தேவதைகள் தோன்றி திருவாய் மலர்ந்தருளியதே லலிதா சகஸ்ரநாமம் ஆகும்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, August 17, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #73 அருள்மிகு கோமதி அம்மன் திருக்கோவில், சங்கரன் கோவில் |
அருள்மிகு கோமதி அம்மன் திருக்கோவில், சங்கரன் கோவில் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
தென்காசி-விருதுநகர் ரயில் பாதை வழியாகவோ ,சாலை வழியில் ராஜபாளையத்திலிருந்து 32 கிமி,திருநெல்வேலியிலிருந்து 40 கிமி தொலைவில் பயணித்து இத்திருத்தலத்தை அடையலாம்.
இறைவன்: சங்கரலிங்கேஸ்வரர், சங்கரநாராயணர்
இறைவி: கோமதி அம்மன்
தீர்த்தம் : நாகசுனை
தலமரம் : புன்னை
தற்போதைய பெயர் : சங்கரன் கோவில்
சிவ , விஷ்ணு பேதமின்றி நாராயணனும் தம்முள் அடக்கம் என்பதை சிவன் பாதி ,நாராயணன் பாதியாக தமது வாம பாகத்தில் நாராயணனைக் காட்டி அற்புதக் காட்சி கொடுத்த திருத்தலம் சங்கரன் கோவில். கோமதியம்மன் தவம் இருந்து சங்கர நாராயணர் திருவுருவத்தை இத்தலத்தில் தரிசித்தார். இதை நினைவு கூறும் வகையில் ஆணுதோறும் இந்த ஆலயத்தில் ஆடித்தபசு உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் ஜெயந்தன் மற்றும் ஸ்தல புராணத்தைக் கேட்க ஆடியோவைக் கேட்கவும்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு கோமதி அம்மன் திருக்கோவில், சங்கரன் கோவில்
Monday, August 11, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #72 அருள்மிகு துர்காம்பிகை திருக்கோவில், பட்டீஸ்வரம் |
அருள்மிகு துர்காம்பிகை திருக்கோவில், பட்டீஸ்வரம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணதிற்குத் தென்மேற்கில் எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் பட்டீஸ்வரம் இருக்கிறது.
இறைவன்: பட்டீஸ்வரன்,தேனுபுரீஸ்வரர்
இறைவி: ஞானாம்பிகை
தீர்த்தம் : கோடி தீர்த்தம்
தற்போதைய பெயர் : பட்டீஸ்வரம் (பழையாறை)
இராவணனைக் கொன்றதால் இராமபிரானுக்கு மூன்று தோஷங்கள் ஏற்படுகின்றன். அதில் மூன்றாவது தோஷமான சாயஹத்தி தோஷத்தை போக்குவதற்காக பட்டீஸ்வரத்தில் சிவலிங்கத்தை (இராம லிங்கம்) பிரதிஷ்டை செய்து வழிபட்டார். மேலும் தேவி பராசக்தி தனித்து தவமிருந்தபோது காமதேனு தனது புத்திரி பட்டியை தேவிக்கு உதவியாக அனுப்பியிருந்தது. பட்டி சிவலிங்கத்தை தூய்மையான பாலால் நீராட்டி வழிபட்டது. பட்டி வழிபட்டதால் இறைவன் பட்டீஸ்வரன் என்றும் ,தலம் பட்டீஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது. மேலும் திருஞானசம்பந்தரின் முத்துப் பந்தல் குறித்து கேட்க ஆடியோவைக் கேட்கவும்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, August 3, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #71 அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் ஆலயம், திருப்பூந்துருத்தி |
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் ஆலயம், திருப்பூந்துருத்தி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
தஞ்சை மாவட்டத்தில், தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் திருக்கண்டியூரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது திருப்பூந்துருத்தி திருத்தலம்.
தற்போதய பெயர் : பூந்துருத்தி
இறைவன் : புஷ்பவவேஸ்வரர்
இறைவி : சௌந்தர்ய நாயகி
தீர்த்தம் : சூர்ய தீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்,திருநாவுக்கரசு சுவாமிகள்
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
இரு ஆற்றங்கரைக்கு நடுவில் உள்ள ஊர்களை துருத்தி என அழைப்பர். இந்திரன் தனது சாபம் நீங்குவதற்காக காவிரி நதிக்கும் , அதன் கிளை ஆறான குடமுருட்டிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் புஷ்பவனம் அமைத்து சிவபெருமானை வழிபட்டதால் இறைவனுக்கு புஷ்பவனேஸ்வரர் என்றும் ,இத்தலம் பூந்துருத்தி எனவும் வழங்கலாயிற்று. இத்தலத்தில் மூன்று நந்திதேவர்களும் சந்நிதியை விட்டு விலகியிருக்கும் காரணத்தையும்,சம்பந்தர் மேட்டின் வரலாற்றையும் அறிய பாட்காஸ்டை கேளுங்கள்
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் ஆலயம், திருப்பூந்துருத்தி
Sunday, July 27, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #70 அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில் ,குடவாயில் |
அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில் ,குடவாயில் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
திருவாரூர் மாவட்டத்தில் ,திருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கொடைவாசல் திருத்தலம் உள்ளது.
தற்போதய பெயர் : கொடைவாசல் (குடவாயில்)
இறைவன் : கோணேஸ்வரர்
இறைவி : பெரிய நாயகி
தலமரம் : வாழை
தீர்த்தம் : அமிர்த்த தீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:00 மணிமுதல் 8 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
பிரளயகாலத்தில் நிலமெல்லாம் கடல் சூழ்ந்தபோது ,ஒரு குடத்தில் வேதங்களை வைத்து சிவலிங்கத்தால் குடத்தின் வாயிலை அடைத்து பாதுகாக்கப்பட்டது. ஆனால் பெருவெள்ளத்தால் குடம் குமபகோணத்தையடுத்துள்ள குடமூக்கு என்ற பகுதியில் ஒதுங்கிவிட்டது. பின்னர் இறைவனின் திருஉள்ளப்படி அந்தக் குடம் மூன்றாக உடைந்து அடிப்பாகம் கும்பகோணத்திலும் ,நடுப்பாகம் திருக்கலயநல்லூரிலும், வாய்ப்பாகம் குடவாயிலிலும் விழுந்தன.
குடவாயில் செங்கணான் ,கருடன் வணங்கிய புராணங்களுக்கு ஆடியோவைக் கேட்கவும்
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
Sunday, July 20, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #69 அருள்மிகு கஜசம்ஹாரமூர்த்தி ஆலயம், வழுவூர் |
அருள்மிகு கஜசம்ஹாரமூர்த்தி ஆலயம், வழுவூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் சாலையில் ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வழுவூர்.
தற்போதய பெயர் : வழுவூர்
இறைவன் : கஜசம்ஹாரமூர்த்தி ,கிருத்திவாசேஸ்வரர்
இறைவி : பாலகுசாம்பிகை
தலமரம் : தாருகை
தீர்த்தம் : ஈசான தீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:00 மணிமுதல் 8 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
பிரளயகாலத்தில் நிலமெல்லாம் கடல் சூழ்ந்தபோது இத்தலம் மட்டும் அழியாமல் வழுவின காரணத்தால் வழுவூர் ,வழுவை எனப் பெயர் ஏற்பட்டதாகப் புராணம் தெரிவிக்கிறது. அட்ட வீராட்டத் தலங்களில் கஜமுகாசுரனைக் கொன்றத் தலம் வழுவூர். நடன சபைகளில் ஞான சபையாகப் போற்றப்படுகிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, July 13, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #68 அருள்மிகு வேங்கைநாதர் திருக்கோவில், திருவேங்கைவாசல் |
அருள்மிகு வேங்கைநாதர் திருக்கோவில், திருவேங்கைவாசல் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
புதுக்கோட்டையிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இத்திருத்தலம். திருக்கோகர்ணத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
இறைவன்: வேங்கைநாதர் ,வியாக்ரபுரீஸ்வரர்
இறைவி: பிரகதாம்பாள்,பெரியநாயகி
தலமரம் : வகுளம்
தற்போதைய பெயர் : வேங்கைவாசல் (வகுளாரண்யம்)
வேங்கை உருவில் வந்த இறைவன் ,காமதேனுவைத் தடுத்தாட்கொண்ட இடம் தான் திருவேங்கைவாசல் திருத்தலம். அன்னை பிரகதாம்பாளுக்கு இரண்டு சந்நிதிகள் உள்ளன. சிற்பி சிலையை உருவாக்கியபோது தேவியின் வலது கட்டைவிரலில் ஒரு பகுதி தட்டையாக அமைந்துவிட்டதால் குளத்தில் வீசிவிட்டு வேறொரு சிலை செய்து பிரதிஷ்டை செய்தனர். பின்னர் தேவியின் அருளால் குளத்தில் வீசப்பட்ட சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு வேங்கைநாதர் திருக்கோவில், திருவேங்கைவாசல்
Sunday, July 6, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #67 அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில், திருக்கொள்ளம்புதூர் |
அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில், திருக்கொள்ளம்புதூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
தஞ்சாவூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் கொரடாசேரிக்கு அருகில் உள்ளது திருக்கொள்ளம்புதூர் .கும்பகோணம் - கொரடாசேரி பேருந்து பாதையில் செல்லூரில் இறங்கியும் இத்தலத்திற்கு செல்லலாம்.
இறைவன்: வில்வவனநாதர்
இறைவி: அழகிய நாச்சியர்
தீர்த்தம் : அகத்திய தீர்த்தம் , பிரம்ம தீர்த்தம் ,அர்ச்சுன தீர்த்தம்
தலமரம் : வில்வம்
தற்போதைய பெயர் : கொள்ளம்புதூர்
பாண்டவர்கள் வனவாசம் செய்து கொண்டிருந்தபோது , கௌமிய முனிவரின் அறிவுரைப்படி அர்ச்சுனன் இத்தலத்து இறைவனை வணங்கி வழிப்பட்டு பசுபதாஸ்திரம் பெற்றான். பல சிவாலயங்களை தரிசித்துக் கொண்டு திருக்கொள்ளம்புதூருக்கு வந்த போது திருஞானசம்பந்தர் , வெள்ளத்தின் காரணமாக ஓடக்காரர்கள் இல்லாமல்,துடுப்பு இல்லாமல் ஓடத்தில் அமர்ந்து "கொட்டமே கமழும்" என்ற பதிகத்தைப்பாடி அக்கரை வந்து சேர்ந்து இறைவனை தரிசித்தார்.இதனால் முள்ளியாற்றுக்கு இப்பகுதியில் "ஓடம் போக்கி ஆறு" என்ற பெயர் ஏற்பட்டது
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில், திருக்கொள்ளம்புதூர்
Sunday, June 29, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #66 அருள்மிகு வீழிநாதர் திருக்கோவில், திருவீழிமிழலை |
அருள்மிகு வீழிநாதர் திருக்கோவில், திருவீழிமிழலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
திருவாரூர் மாவட்டத்தில் கொடவாசல் வட்டத்தில் பூந்தோட்டம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே பத்து கிலோமிட்டர் தொலைவில் உள்ளது இத்தலம்.
இறைவன்: வீழிநாதர், மாப்பிள்ளை சுவாமி
இறைவி: சுந்தர குஜாம்பிகை
தீர்த்தம் : விஷ்ணு தீர்த்தம் , பிரம்ம தீர்த்தம்
தலமரம் : பலா
தற்போதைய பெயர் : வீழிமிழலை
இறைவி தவம் இருந்து இறைவனை திருமணம் புரிந்து கொண்ட ஸ்தலம் என்பதால் ,திருமணம் ஆக வேண்டிய பெண்கள் கல்யாண சுந்தரரை வழிப்பட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இத்தலத்து இறைவனை பிரம்மன் வழிப்பட்டு படைக்கும் ஆற்றலை மீண்டும் பெற்றான். திருமால் சிவபெருமானிடமிருந்து ஜலந்திரனை அழிக்க உபயோகித்த சக்கரப்படையைப் பெறுவதற்க்காக இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி ஆயிரம் தாமரை மலர்களால் தினமும் பூஜித்து வந்தார். ஒருநாள் ஒரு மலர் குறைந்து காணப்பட்டது. பூஜை தடைபடாமல் இருக்க,உடனே தனது வலது கண்ணை இறைவன் திருவடியில் சமர்ப்பித்தார். திருமால் கண்மலர் சாத்தி வழிப்பட்ட இடம் தான் திருவீழிமிழலை.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 26 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, June 22, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #65 அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில், வடகுரங்காடுதுறை |
அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில், வடகுரங்காடுதுறை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி.மி தொலைவில் உள்ளது.
தற்போதய பெயர் : வடகுரங்காடுதுறை
இறைவன் : தயாநிதீஸ்வரர், குலைவணங்குநாதர்
இறைவி : ஜடா மகுட நாயகி
தலமரம் : தென்னை
தீர்த்தம் : வாலிதீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:30 மணிமுதல் 8 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
வாலியும்,சுக்ரீவனும் வழிப்பட்ட இரண்டு சிவஸ்தலங்கள் குரங்காடுதுறை என்ற பெயரில் இருக்கின்றன. திருவையாறு அருகே காவிரியின் வடகரையில் உள்ளதால் இத்தலம் வடகுரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது.போரில் தனது அறுந்த வாலை இத்தலத்து இறைவனை வழிப்பட்டு மீண்டும் வால் வளரும் பேறு பெற்றான்.கிட்டத்தட்ட 1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோபுரத்தில் வாலி இறைவனை வழிப்படும் சிற்பமும் ,ஈசன் கர்ப்பிணிப் பெண்ணுக்கு தென்னங்குலை வளைத்த சிற்பமும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில், வடகுரங்காடுதுறை
Sunday, June 15, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #64 அருள்மிகு ஓதனேஸ்வரர் ஆலயம், திருச்சோற்றுத்துறை |
அருள்மிகு ஓதனேஸ்வரர் ஆலயம், திருச்சோற்றுத்துறை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கப்படும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
visit http://www.adhikaalai.com
தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் வழியிலுள்ள கண்டியூரிலிருந்து கிழக்கே சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் இருக்கிறது திருச்சோற்றுத்துறை திருத்தலம்.
தற்போதய பெயர் : சோற்றுத்துறை
இறைவன் : ஓதனேஸ்வரர்,சோற்றுத்துறை ஈசர்
இறைவி : அன்னபூரணி
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்த சுவாமிகள்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:30 மணிமுதல் 8 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
’சோழ நாடு சோறுடைத்து’ என்பது முதுமொழி. சோற்றுக்குப் பஞ்சமில்லாத சோழநாட்டில் திருச்சோற்றுத்துறை என ஒர் ஊரின் பெயர் அமைந்திருப்பதில் வியப்பேதும் இல்லை. திருவையாற்றை மையமாக கொண்ட சபஸ்தானத் தலங்களில் திருச்சோற்றுத்துறை மூன்றாவது தலமாகும். இத்தலத்திற்கு தெற்கில் ஓடும் வாய்காலுக்கு சோற்றுடையான் வாய்க்கால் என்று பெயர். திருமழப்பாடியில் நடைப்பெற்ற நந்தியம்பெருமானின் திருமணத்தின் போது உணவுவகை அனைத்தும் இத்தலத்திலிருந்து சென்றதாக வரலாறு.காசி மாநகரில் பஞ்சம் நீக்கி பசிப்பிணி தீர்க்கும் அன்னபூரணி போல் இத்தலத்திலும் தேவி தம்மை நாடிவரும் பக்தர்களின் பசிப்பிணி நீக்கி அருள்மழை பொழிகிறாள்.காசி விஸ்வநாதர் போல் திருச்சோற்றுத்துறை ஓதனேஸ்வரர் பிறவிப் பிணி நீக்கி அருள்புரிகிறார்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 20 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, June 8, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #63 அருள்மிகு பாதிரிவனேஸ்வரர் திருக்கோவில், திருஅவளிவநல்லூர் |
அருள்மிகு பாதிரிவனேஸ்வரர் திருக்கோவில், திருஅவளிவநல்லூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
தஞ்சாவூர் மாவட்டத்தில் வலங்கைமான் வட்டத்தில் உள்ளது திருஅவளிவநல்லூர். தஞ்சாவூர் நீடாமங்கலம் இருப்புப் பாதையில் உள்ள அம்மாபேட்டை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருஅவளிவ நல்லூர்.
இறைவன்: பாதிரிவனேஸ்வரர்,சாட்சிநாதர்,தம்பரிசுடையார்
இறைவி: சவுந்தர்ய நாயகி
தீர்த்தம் : சிவபுஷ்கரணி
தலமரம் : பாதிரி மரம்
தற்போதைய பெயர் : திருஅவளிவநல்லூர் (பாதிரி வனம்,புல்லாரண்யம்)
பஞ்சாரண்யத் தலங்களில் இரண்டாவதாகத் தரிசிக்க வேண்டியது திருஅவளிவநல்லூர். காலை சந்தி நேரமாகிய 8.30 முதல் 9.30 மணிக்குள் திருஅவளிவநல்லூரில் கோயில் கொண்டிருக்கும் சவுந்தர்ய நாயகி சமேத பாதிரிவனேஸ்வரரைத் தரிசிக்க வேண்டும்.மூலவர் சிவலிங்கத்தோடு இறைவனும் உமையம்மையும் காட்சிக் கொடுக்கும் அமைப்பை ஒரு சில சிவாலயங்களில் மட்டுமே காண முடியும். தை அமாவாசையன்று பாதிரிவனேஸ்வரர் பரிவார மூர்த்திகளுடன் சிவபுஷ்கரிணியில் தீர்த்தம் அருளும்போது பக்தர்களும் புனித நீராடி மகிழ்வது இப்போதும் வழக்கமாக இருக்கிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு பாதிரிவனேஸ்வரர் திருக்கோவில், திருஅவளிவநல்லூர்
Sunday, June 1, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #62 அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோவில், திலதர்ப்பணப்புரி |
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோவில், திலதர்ப்பணப்புரி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
மயிலாடுதுறை - திருவாரூர் பஸ் மார்க்கத்தில் பூந்தோட்டம் என்ற ஊரில் இறங்கி,அங்கிருந்து எரவாஞ்சேரி பஸ் மார்க்கத்தில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் திலதர்ப்பணப்புரி புண்ணியத்தலம் உள்ளது.
இறைவன்: முக்தீஸ்வரர்,மந்தாரவனேஸ்வரர்
இறைவி: சொர்ணவல்லி
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
தலமரம் : மந்தார மரம்
தற்போதைய பெயர் : திலதர்ப்பணப்புரி (திலதைப்பதி)
பித்ரு தலங்கள் இந்தியாவில் மொத்தம் ஏழு.காசி,திரிவேணி சங்கமம்,ராமேஸ்வரம்,ஸ்ரீ வாஞ்சியம்,திருவெண்காடு,கயா என்கிற ஆறோடு ஏழாவது சிறப்புத்தலம் திலதர்ப்பணப்புரி.ராமாயணத்தில்,சீதா பிராட்டியை ராவணன் கடத்திச் செல்லும் போது ஜடாயு பறவை வழிமறித்து சண்டை போட்டு வாளினால் வெட்டுப்பட்டு இறந்தது. இலங்கையை நோக்கி வரும் போது,திலத்தர்ப்பணப்புரிக்கு வந்த ராமபிரானும்,லட்சுமணனும் தங்கள் தந்தையான தசரத சக்ரவர்த்திக்கும்,தந்தைக்கு நிகராக நேசித்த ஜடாயு பறவைக்கும் திலதர்ப்பணப்புரியில் தர்ப்பணம் செய்து பிண்டம் இட்டனர்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோவில், திலதர்ப்பணப்புரி
Sunday, May 25, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #61 அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்,குரங்கணில்முட்டம் |
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்,குரங்கணில்முட்டம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் பேருந்து பாதையில் தூசி என்ற ஊரையடைந்து,அங்கிருந்து இரண்டு கி.மி செல்ல வேண்டும்.
இறைவன்: வாலீஸ்வரர்,கொய்யாமலைநாதர்
இறைவி: இறையார் வளையம்மை,ஸ்ரீ பூரணகங்கணதாரணி
தீர்த்தம் : காக்கைத்தீர்த்தம்
தலமரம் : இலந்தை
தற்போதைய பெயர் : குரங்கணில்முட்டம்
வாலி குரங்கு வடிவிலும் ,இந்திரன் அணில் வடிவிலும் ,எமன் முட்டம் (காகம்) வடிவிலும் வாலீஸ்வரரை வழிப்பட்டதால் குரங்கு+அணில்+முட்டம்=குரங்கணில்முட்டம். கி.பி 637 -இல் மகேந்திரவர்ம பல்லவனால் இத்திருக்கோயில் கட்டப்பட்டது.மூலவர் மேற்கு பார்த்த சன்னதி.அம்பாள் தெற்கு பார்த்த சன்னதி.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்,குரங்கணில்முட்டம்