Sunday, March 15, 2009

அருள்மிகு நரசிம்மேஸ்வரர் ஆலயம், ஐயம்பேட்டைசேரி

அருள்மிகு நரசிம்மேஸ்வரர் ஆலயம், ஐயம்பேட்டைசேரி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கப்படும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).


சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்துக்கு அடுத்த காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் கிளைசாலையின் வலப்பக்கமாக 7 கிமி பயணித்தல் ஐயம்பேட்டைசேரி கிராமம் வரும். இங்கிருந்து வலது பக்கமாக செல்லும் சாலையில் 1 கிமி தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.


தற்போதய பெயர் : ஐயம்பேட்டைசேரி ( பழைய பெயர் : தியாகமுகசேரி,திசைமுகசேரி)

இறைவன் : நரசிம்மேஸ்வரர்

இறைவி : மரகதவல்லி

தலமரம் : வன்னி

தரிசன நேரம் : காலை 6 மணிமுதல் 12 மணி வரை, மாலை 4 மணிமுதல் 7.30 மணி வரை.

பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.

திசைமுகன் என்பது பிரம்மாவைக் குறிக்கும். பிரம்மனின் விருப்பப்படி அவருக்கு திருமால் பரமபதநாதராக இந்தத் திருத்தலத்தில் காட்சி கொடுத்ததால் திசைமுகச்சேரி என இத்தலத்திற்கு பெயர் ஏற்பட்டது.நரசிம்மமூர்த்தி இரண்யனை வதம் செய்தபிறகு , இரண்யனின் உயிரற்ற உடலைக் கழுத்தில் மாலையாக போட்டபடி சுழன்று உக்கிரத்துடன் ஆடினார். ஈஸ்வரன் நரசிம்மர் முன் சரபராக வடிவெடுத்து அவரை அமைதிபடுத்தினார். தன்னை சாந்தம்படுத்திய ஈஸ்வரனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அங்கேயே ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிப்பட்டார். இது நடந்தது இத்தலத்தில் தான்.அதனால் தான் ஈஸ்வருக்கு நரசிம்மேஸ்வரர் என திருநாமமும் ஏற்பட்டது.

மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :



ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 40 விநாடி

எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்




டவுன்லோட் அருள்மிகு நரசிம்மேஸ்வரர் ஆலயம், ஐயம்பேட்டைசேரி

5 Comments:

Earn Staying Home said...

Your blog is good.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Chennaimoms.com said...

your blog is really good,why you are not updating any new temple information.keep it up.we have a chennai mothers network site.Here you can share your blog and get solution for all parenting questions. if you are interested you will share your blog also with www.chennaimoms.com

Chanakyan said...

I dont have words to thank you. You are doing a great service to all of us. Millions of thanks to you.

Chanakyan said...

Mr Natraj, You are doing a great service and also your speech is great, in a down to earth form, which is the need of the hour so that it can reach all. Please dont worry about other critics who see only wrongs where none exists