அருள்மிகு அபயாம்பிகை ஆலயம், மயிலாடுதுறை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
மயிலாடுதுறை நகரின் மத்தியில் மாயூரநாதசுவாமி- அபயாம்பிகை திருக்கோயில் அமைந்துள்ளது.
தற்போதய பெயர் : மயிலாடுதுறை
இறைவன் : மாயூரநாதசுவாமி
இறைவி : அபயாம்பிகை
தீர்த்தம் : பிரம்மதீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:30 மணிமுதல் 8 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
அம்பிகை மயில் உருவத்தில் இறைவனைப் பூஜீத்து திருமணம் செய்து கொண்ட ஸ்தலமாதலால் மயிலாடுதுறை என்று பெயர் பெற்றது. ஐப்பசி மாதத் திருவிழாவின் போது அம்பிகை மயில் உருவமாக வழிப்பட்ட ஐதீக விழா நடைபெறுகிறது. துலா ஸ்னானத்திற்கு புகழ்ப்பெற்றது மயிலாடுதுறை . ஐப்பசி மாதத்து அமாவாசையன்று (தீபாவளி) கங்கை,யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகளும் மயிலாடுதுறையில் காவிரியின் இடப தீர்த்தத்தில் நீராடியதாக ஐதீகம்! இதனால் தீபாவளியன்று காவிரி நீரில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Monday, September 1, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #75 அருள்மிகு அபயாம்பிகை ஆலயம், மயிலாடுதுறை |
Monday, August 11, 2008
[+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #72 அருள்மிகு துர்காம்பிகை திருக்கோவில், பட்டீஸ்வரம் |
அருள்மிகு துர்காம்பிகை திருக்கோவில், பட்டீஸ்வரம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணதிற்குத் தென்மேற்கில் எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் பட்டீஸ்வரம் இருக்கிறது.
இறைவன்: பட்டீஸ்வரன்,தேனுபுரீஸ்வரர்
இறைவி: ஞானாம்பிகை
தீர்த்தம் : கோடி தீர்த்தம்
தற்போதைய பெயர் : பட்டீஸ்வரம் (பழையாறை)
இராவணனைக் கொன்றதால் இராமபிரானுக்கு மூன்று தோஷங்கள் ஏற்படுகின்றன். அதில் மூன்றாவது தோஷமான சாயஹத்தி தோஷத்தை போக்குவதற்காக பட்டீஸ்வரத்தில் சிவலிங்கத்தை (இராம லிங்கம்) பிரதிஷ்டை செய்து வழிபட்டார். மேலும் தேவி பராசக்தி தனித்து தவமிருந்தபோது காமதேனு தனது புத்திரி பட்டியை தேவிக்கு உதவியாக அனுப்பியிருந்தது. பட்டி சிவலிங்கத்தை தூய்மையான பாலால் நீராட்டி வழிபட்டது. பட்டி வழிபட்டதால் இறைவன் பட்டீஸ்வரன் என்றும் ,தலம் பட்டீஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது. மேலும் திருஞானசம்பந்தரின் முத்துப் பந்தல் குறித்து கேட்க ஆடியோவைக் கேட்கவும்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்