
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #28 (ஆடுதுறை பெருமாள் கோயில்,திருக்கூடலூர்)
ஆடுதுறை பெருமாள் கோயில்,திருக்கூடலூர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சோழ நாட்டு திருப்பதிகளில் ஒன்றான இத்திருத்தலம் கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது.மதுரையை தென்திருக்கூடலூர் என்றும் இதனை வடத்திருக்கூடலூர் என்றும் கூறுவர்.
மூலவர் : வையம்காத்த பெருமாள் : கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார் : புஷ்ப்பவள்ளி
தீர்த்தம் : சக்ரதீர்த்தம்
விமானம் : சுத்தஸ்தவவிமானம்
நந்தக முனிவரோடு தேவர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து வழிபட்டமையால் இதற்கு கூடலூர் என்று பெயர் ஏற்பட்டதாக கூறுவர்.திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.ராணி மங்கம்மாளுக்கு இக்கோவிலில் சிலையெடுக்கப்பட்டுள்ளது.இக்கோவிலின் உட்புற மதில்சுவரில் இருக்கும் கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டு தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, October 7, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #28 (ஆடுதுறை பெருமாள் கோயில்,திருக்கூடலூர்) |
Sunday, September 23, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #26 (ஸ்ரீ கஜேந்திரவரதர் ஆலயம்,திருக்கவித்தலம்(கபிஸ்தலம்)) |

ஸ்ரீ கஜேந்திரவரதர் ஆலயம்,திருக்கவித்தலம் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சோழ நாட்டு திருப்பதிகளில் ஒன்றான இத்திருத்தலம் தஞ்சையிலிருந்து திருவையாறு வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது.பாபநாசம் ரயில்நிலையத்திலிருந்து 3 கி.மி தொலைவில் உள்ளது.
மூலவர் : கஜேந்திரவரதர் : புஜங்க சயனம் ,கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : ரமாமணவல்லி(பொற்றாமறையாள் )
தீர்த்தம் : கஜேந்திரபுஷ்கரிணி ,கபிலதீர்த்தம்
விமானம் : ககநாக்ருத விமானம்
இக்கபிஸ்தலத்தில் உள்ள கோவிலின் முன்பு அமைந்துள்ள கபில தீர்த்தம் எனும் குளத்தில் ஒருநாள் கஜேந்திரன்(யானை) நீரருந்த இறங்கும் போது முதலை கவ்வ,யானை பிளிற,கருட வாகனத்தில் வந்த மகா விஷ்ணு தம் சக்ராயுதத்தால் முதலையைக் கொன்று யானைக்கு மோட்சமளித்ததாக வரலாறு.கஜேந்திர மோட்சம் பங்குனி மாதத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, September 16, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #25 (அருள்மிகு கேது,நாகநாதஸ்வாமி ஆலயம்,கீழப்பெரும்பள்ளம்) |

அருள்மிகு கேது,நாகநாதஸ்வாமி ஆலயம்,கீழப்பெரும்பள்ளம் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
கேது ஞானத்தை கொடுக்கக் கூடியவர்.ஞானம்.மோட்சம்,புனித நீராடல்,அயல்நாட்டுப் பயணம்,கடின உழைப்பு,வைத்தியர்,தீ விபத்து,தோல் வியாதி,ஜுரம் - இப்படி பலவற்றிற்கு காரணமாக இருப்பவர் கேது.கேது பகவானின் அதிதேவதை பிரம்மா,சித்திரகுப்தன்.விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடுவது,கொள்ளு தானம் செய்வது போன்றவை கேது ப்ரீத்தியாகும்.
தலம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் பாதையில் தர்மகுளம் என்று ஒரு சிற்றூர்.இதற்கு தெற்கே 2 கி.மி. தொலைவில் உள்ளது கீழப்பெரும்பள்ளம் நாகநாதஸ்வாமி ஆலயம்.
இறைவன் : நாகநாதஸ்வாமி
இறைவி : சௌந்தர்யநாயகி
ஷேத்திர பாலகர் : கேது
வாகனம் : கழுகு
நிறம் : சிவப்பு
தானியம் : கொள்ளு
மலர் : செவ்வரளி
ரத்தினம் : வைடூர்யம்
தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 7
ஆலயம் கிழ்க்கு நோக்கி உள்ளது.கிழ்க்கு கோபுர வாசல் முன்பு நாக்தீர்த்தம் உள்ளது.வாசுகி பாம்பு நாக்நாதஸ்வாமியை வழிபட்டு வந்தபோது அமைந்த தீர்த்தம் என்கிறார்கள்.விக்கிரம சோழன் கல்வெட்டில் இத்தலம் திருவலபுரம் எனக் குறிப்பிடப்பட்டிறிக்கிறது.இத்தலத்தின் ஸ்தல விருக்ஷ்ம் மூங்கில்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 10 நிமி 16 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு கேது,நாகநாதஸ்வாமி ஆலயம்,கீழப்பெரும்பள்ளம்
Tuesday, September 4, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #23 (அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்,திருநள்ளாறு) |

அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்,திருநள்ளாறு கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
நள்ளாறு என்பதற்கு ஆறுகளின் மத்தியில் உள்ள பகுதி என்று பொருள்.அரிசொல் மற்றும் வாஞ்சை ஆறு எனும் இரண்டு ஆறுகள் இத்தலத்தின் தெற்கிலும் வடக்கிலும் ஓடுவதால் இத்தலத்திற்கு திருநள்ளாறு என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறுவார்கள்.அருள்மிகு பிராணேஸ்வரி சமேத தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் புராதனப் பெருமை வாய்ந்த ஆலயம் என்றாலும் இங்குள்ள சனீஸ்வர பகவான்
சந்நிதிதான் மிகவும் பிரசித்தமானது.
கும்பகோணத்தில் இறங்கினால் 38 கி.மி தொலைவில் உள்ளது திருநள்ளாறு.கும்பகோணம் செல்லும் பாதையில் காரைக்கால்-மயிலாடுதுறை பேருந்து தடத்தில் உள்ளது.மயிலாடுதுறையிலிருந்தும் பஸ் வசதிகள் உண்டு.
இறைவன் : தர்ப்பாரண்யேஸ்வரர்
இறைவி : பிராணேஸ்வரி
ஷேத்திர கதாநாயகர் : சனி
தானியம் : எள்
மலர் : வன்னி,கருப்பு குவளை
வஸ்திரம் :கருப்பு நிற ஆடை
ரத்தினம் : நீலம்
வாகனம் :காக்கை
தீர்த்தம் : நள தீர்த்தம்
தரிசன நேரம் : காலை 5 - 12 மாலை 4 - 9.00
ஆலயத்தின் இராஜகோபுரம் கிழக்கு நோக்கி இருக்கிறது.உள்ளே கொடிமரம்,முன் மண்டபத்தை கடந்து வந்தால் இடப்பக்கம் விநாயகரும் வலப்பக்கம் நந்தியும் குடி கொண்டிருக்கிறார்கள்.
ஆலயத்தின் உள்ளே முதலில் இருப்பது இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் .அடுத்தது அன்னை பிராணேஸ்வரியின் ஆலயம்.தென்புற வாசல் வழியாக வந்தால் தியாகராஜர் சந்நிதி.நீலோத்பலாம்பாள் சகித ஸ்ரி நகவிடங்க செண்பக தியாகேசர் திருவருள் புரிகிறார்.அற்புத அருள்கொண்ட மரகதலிங்கத் திருமேனியும் கவர்கிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 10 நிமி 58 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, August 26, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #22 (அருள்மிகு அக்னீஸ்வரர் ஆலயம்,கஞ்சனூர்) |

அருள்மிகு அக்னீஸ்வரர் ஆலயம்,கஞ்சனூர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
நவக்கிரகங்களில் ஆறாவது கிரகமாக விளங்குபவர் சுக்ர பகவான்.சப்த ரிஷிகளில் ஒருவரான பிருகு முனிவருக்கும் கியாதி என்ற பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர்.தேவகுருவான பிரகஸ்பதிக்கு நிகராக சகல கலைகளிலும்,சாஸ்திரங்களிலும் வல்லவர்.சிவபெருமானைக் குறித்து தவம் இருந்து "மிருத சஞ்சீவினி" வரத்தை பெற்றவர்.சுக்ர பகவானின் பரிகார தலமான கஞ்சனூர்.
கும்பகோணத்தில் இறங்கினால் கிழக்கில் 18 கி.மி தொலைவில் உள்ளது கஞ்சனூர்.கும்பகோணத்திலிருந்து 2A,2B,38,54 போன்ற நகர பேருந்துகள் கஞ்சனூர் செல்லும்.மயிலாடுதுறையிலிருந்தும் பஸ் வசதிகள் உண்டு.
இறைவன் : அக்னீச்வரர்
இறைவி : கற்பகாம்பிகை
ஷேத்திர கதாநாயகர் : சுக்ரன்
தானியம் :மொச்சை
மலர் : வெண்தாமரை
வஸ்திரம் :வெள்ளைநிற ஆடை
ரத்தினம் : வைரம்
உலோகம் : வெள்ளி
தரிசன நேரம் : காலை 8 - 12 மாலை 4 - 8.00
ஆலயத்தின் இராஜகோபுரம் தெற்கு நோக்கி இருக்கிறது.உள்ளே கொடிமரம்,முன் மண்டபத்தை கடந்து வந்தால் இடப்பக்கம் விநாயகரும் வலப்பக்கம் காசி விஸ்வநாதர்,விசாலாட்சியும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள்.
ஆலயத்தின் உள்ளே முதலில் இருப்பது அன்னை கற்பகாம்பிகையின் ஆலயம்.அடுத்தது இறைவன் அக்னீச்வரரின் ஆலயம்.இரண்டுமே கிழக்கு நோக்கி தான் உள்ளன.மேற்கு பக்கமாக நந்தி மற்றும் நடராஜர்,நவக்கிரக பீடம்,சனி பகவான் ஆகியோர் உள்ளனர்.இத்தலத்தில் முன்று இடங்களில் முன்று சனீஸ்வரர் திருஉருவச் சிலைகள் இருப்பதும் விசேஷம்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 8 நிமி 33 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, August 12, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #20 (அருள்மிகு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்,திருவெண்காடு) |
![]()
அருள்மிகு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்,திருவெண்காடு கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
திருவெண்காடு நவக்கிரகங்களில் புதனுடைய தலம்.கல்வி,அறிவு,பேச்சுதிறமை,இசை,சோதிடம்,கணிதம்,புலமை ஆகியவற்றை தர வல்லவர் புதன்.இவருக்கு வித்யாகாரகன் என்றும் பெயர். புதனுக்குப் பிடித்த நிறம் பச்சை. சாத்வீக குணம் சூரியனிடமிருந்து பிரகாசத்தை இழுத்து செடி, கொடிகளை பச்சை நிறமாக்கும் தன்மை உடையவர். பச்சைப் பயிறு தானியத்தை தானம் கொடுத்தால் ப்ரீதி அடைவார்.
தலம்: மயிலாடுதுறையிலிருந்து 25 கி.மீ., சீர்காழியில் இருந்து 10 கி.மீ., பூம்புகாரிலிருந்து 8 கி.மீ. பஸ் உண்டு.
இறைவன் : ஸ்வேதாரண்யேஸ்வரர்
இறைவி : பிரம்ம வித்யாம்பிகை
ஷேத்திர பாலகர் : புதன்
வாகனம் : குதிரை
தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 9
சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் பாடிய பெருமை இத்தலத்திற்கு உண்டு. காசிக்கு இணையான ஆறுதலங்களுள் இதுவும் ஓன்று. இத்திருத்தலத்திற்கு சுவேதவனம் என்று பெயர் (சுவேதம் என்றால் வெண்மை. வனம் என்றால் காடு). இக்கோயிலில் சுவேதாரண்யர், அகோர முர்தி, நடராஜர் என்று மும் மூர்த்திகள். பிரம்மவித்யாம்பிகை, அஷ்டபுஜ துர்கை, காளி என்று மூன்று அம்பிகை சந்நதிகள். அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று மூன்று சுவாமி புஷ்கரணிகள். ஆலமரம், கொன்றை, வில்வம் என்று மூன்று தல விருக்ஷங்கள்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 8 நிமி 33 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, July 29, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #18 (அருள்மிகு கைலாசநாதர் ஆலயம்,திங்களூர்) |



அருள்மிகு கைலாசநாதர் ஆலயம்,திங்களூர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
நவக்கிரகங்களில் சூரியனுக்கு அடுத்ததாக கருதப்படுவது சந்திரன்.தேவர்களும் அசுரகளும் மந்தார மலையை மத்தாக அமைத்து வாசுகி எனும் பாம்பைக் கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்த போது பல பொருள்கள் கிடைத்தன.அவ்வாறு கிடைத்த பொருள்களில் ஒருவர் தான் சந்திரன்.சந்திரன், திருமாலின் மார்பில் உதித்தவன் என்றும் அத்திரி முனிவருக்கு அனுசுயா தேவி மூலம் பிறந்தவர் என்றும் கூறுவதுண்டு.
திங்களூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் சுமார் 5 கிமி தொலைவில் உள்ளது.
இறைவன் : கைலாசநாதர்
இறைவி : பெரியநாயகி
ஷேத்திர பாலகர் : சந்திரன்
வாகனம் : வெள்ளை குதிரை
தரிசன நேரம் : காலை 7 - 12 மாலை 4 - 8
திங்களூர் கோவில் ஸ்தலத்தில் இராஜகோபுரம் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது.உள்ளே தென்மேற்கு மூலையில் விநாயகரும், வடமேற்கு கஜல்ட்சுமியும், வடக்கு ப்க்கம் துர்க்காதேவியும்,ச்ண்டிகேஸ்வரரும் காட்சி தருகிறார்கள்.கிழக்கில் இடதுபுறத்தில் ஷேத்திர பாலகர் சந்திரன் சந்நிதி இருக்கிறது.தெற்கு வழியாக மண்டபத்தில் நுழைந்தால் அப்பூதி அடிகள்,அவர் குடும்பத்தார் திருஉருவச்சிலைகளும்,வலது புறம் திருநாவுக்கரசு சுவாமிகளின் திருஉருவச்சிலையும் உள்ளன.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 8 நிமி 33 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Monday, July 2, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# 14 (அருள்மிகு சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்,திருக்கோவிலூர்) |
அருள்மிகு சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்,திருக்கோவிலூர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சிவபெருமான் அந்தகாசுரனை வதைத்த தலமே திருக்கோவிலூர்.திருக்கோவலூர் என்பது பழைய பெயர்.
கருவறையில் லிங்க ரூபமாய் அருள் புரிகிறார் சிவபெருமான் .அன்னை சிவானந்தவல்லி,பெரியநாயகி எனும் பெயர்களில் தனி சந்நிதியில் அருள் புரிகிறார் .வடபுறத்தில் துர்கையம்மனும் முன்னர் கணபதியும் அருள் புரிகின்றனர்.
சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் வாழ்ந்தவர்தான் 63 நாயன்மார்களில் ஒருவரான மெய்பொருள் நாயனார்.தன் உயிர் போகும் நிலையிலும் தன்னை தாக்கியவர் சிவனடியார் வடிவிலிருந்ததால் அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்துவிட்டு,அந்த செய்தியை கேட்ட பின்னரே சிவனோடு கலந்த மெய்பொருள் நாயனாரின் ஜீவ சமாதி அம்பாள் சந்நிதிக்கு தெற்கே அமைந்துள்ளது.
இத்தகு சிறப்பு கொண்ட திருக்கோவிலூர் விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை நதிக்கரையில் உள்ளது.
மேலும் ஸ்தலபுராணம் மற்றும் இத்தலத்தை ப்ற்றி கேட்க
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
அருள்மிகு சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்,திருக்கோவிலூர்