
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #28 (ஆடுதுறை பெருமாள் கோயில்,திருக்கூடலூர்)
ஆடுதுறை பெருமாள் கோயில்,திருக்கூடலூர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சோழ நாட்டு திருப்பதிகளில் ஒன்றான இத்திருத்தலம் கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது.மதுரையை தென்திருக்கூடலூர் என்றும் இதனை வடத்திருக்கூடலூர் என்றும் கூறுவர்.
மூலவர் : வையம்காத்த பெருமாள் : கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார் : புஷ்ப்பவள்ளி
தீர்த்தம் : சக்ரதீர்த்தம்
விமானம் : சுத்தஸ்தவவிமானம்
நந்தக முனிவரோடு தேவர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து வழிபட்டமையால் இதற்கு கூடலூர் என்று பெயர் ஏற்பட்டதாக கூறுவர்.திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.ராணி மங்கம்மாளுக்கு இக்கோவிலில் சிலையெடுக்கப்பட்டுள்ளது.இக்கோவிலின் உட்புற மதில்சுவரில் இருக்கும் கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டு தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, October 7, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #28 (ஆடுதுறை பெருமாள் கோயில்,திருக்கூடலூர்) |
Sunday, September 23, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #26 (ஸ்ரீ கஜேந்திரவரதர் ஆலயம்,திருக்கவித்தலம்(கபிஸ்தலம்)) |

ஸ்ரீ கஜேந்திரவரதர் ஆலயம்,திருக்கவித்தலம் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சோழ நாட்டு திருப்பதிகளில் ஒன்றான இத்திருத்தலம் தஞ்சையிலிருந்து திருவையாறு வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது.பாபநாசம் ரயில்நிலையத்திலிருந்து 3 கி.மி தொலைவில் உள்ளது.
மூலவர் : கஜேந்திரவரதர் : புஜங்க சயனம் ,கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : ரமாமணவல்லி(பொற்றாமறையாள் )
தீர்த்தம் : கஜேந்திரபுஷ்கரிணி ,கபிலதீர்த்தம்
விமானம் : ககநாக்ருத விமானம்
இக்கபிஸ்தலத்தில் உள்ள கோவிலின் முன்பு அமைந்துள்ள கபில தீர்த்தம் எனும் குளத்தில் ஒருநாள் கஜேந்திரன்(யானை) நீரருந்த இறங்கும் போது முதலை கவ்வ,யானை பிளிற,கருட வாகனத்தில் வந்த மகா விஷ்ணு தம் சக்ராயுதத்தால் முதலையைக் கொன்று யானைக்கு மோட்சமளித்ததாக வரலாறு.கஜேந்திர மோட்சம் பங்குனி மாதத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, September 16, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #25 (அருள்மிகு கேது,நாகநாதஸ்வாமி ஆலயம்,கீழப்பெரும்பள்ளம்) |

அருள்மிகு கேது,நாகநாதஸ்வாமி ஆலயம்,கீழப்பெரும்பள்ளம் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
கேது ஞானத்தை கொடுக்கக் கூடியவர்.ஞானம்.மோட்சம்,புனித நீராடல்,அயல்நாட்டுப் பயணம்,கடின உழைப்பு,வைத்தியர்,தீ விபத்து,தோல் வியாதி,ஜுரம் - இப்படி பலவற்றிற்கு காரணமாக இருப்பவர் கேது.கேது பகவானின் அதிதேவதை பிரம்மா,சித்திரகுப்தன்.விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடுவது,கொள்ளு தானம் செய்வது போன்றவை கேது ப்ரீத்தியாகும்.
தலம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் பாதையில் தர்மகுளம் என்று ஒரு சிற்றூர்.இதற்கு தெற்கே 2 கி.மி. தொலைவில் உள்ளது கீழப்பெரும்பள்ளம் நாகநாதஸ்வாமி ஆலயம்.
இறைவன் : நாகநாதஸ்வாமி
இறைவி : சௌந்தர்யநாயகி
ஷேத்திர பாலகர் : கேது
வாகனம் : கழுகு
நிறம் : சிவப்பு
தானியம் : கொள்ளு
மலர் : செவ்வரளி
ரத்தினம் : வைடூர்யம்
தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 7
ஆலயம் கிழ்க்கு நோக்கி உள்ளது.கிழ்க்கு கோபுர வாசல் முன்பு நாக்தீர்த்தம் உள்ளது.வாசுகி பாம்பு நாக்நாதஸ்வாமியை வழிபட்டு வந்தபோது அமைந்த தீர்த்தம் என்கிறார்கள்.விக்கிரம சோழன் கல்வெட்டில் இத்தலம் திருவலபுரம் எனக் குறிப்பிடப்பட்டிறிக்கிறது.இத்தலத்தின் ஸ்தல விருக்ஷ்ம் மூங்கில்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 10 நிமி 16 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு கேது,நாகநாதஸ்வாமி ஆலயம்,கீழப்பெரும்பள்ளம்
Sunday, September 9, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #24 (அருள்மிகு நாகநாதர் ஆலயம்,திருநாகேஸ்வரம்) |

அருள்மிகு நாகநாதர் ஆலயம்,திருநாகேஸ்வரம் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
திருநாகேஸ்வரம் நவக்கிரகங்களில் ராகு பகவானின் தலம்.ஒருவரது யோகம்,பதவி,தொழில்,வளமான வாழ்வு,எதிர்ப்பை வெல்லல்,வறுமை நீங்க,கடன் தீர,சக்தீ ஆகியவற்றை தர வல்லவர் ராகு .ராகு யோகத்திற்கு அதிபதி.ராகுவையும்,கேதுவையும் முறைப்படி கிரகங்கள் என்று அழைப்பதில்லை.இவற்றை சாயா கிரகங்கள் என்று சொல்லுவார்கள்.
தலம்: கும்பகோணதிலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் உள்ளது இத்தலம்.தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணதிலிருந்து கிழக்கே 5 கி.மி தொலைவில் உள்ளது
இறைவன் : நாகநாதர்,அர்த்த நாரீசர்
இறைவி : பிறையணிவாள்நுதலம்மை,கிரிகுஜாம்பிகை
ஷேத்திர பாலகர் : ராகு
வாகனம் : நீல சிங்கம்
நிறம் : கருமை
தானியம் : உளுந்து
மலர் : மந்தாரை
ரத்தினம் : கோமேதகம்
உலோகம் : கருங்கல்
தரிசன நேரம் : காலை 5 - 12 மாலை 4 - 9
அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று பன்னிரெண்டு சுவாமி புஷ்கரணிகள். சேக்கீழார் சுவாமிகளால் திருப்பணிகள் செய்யப்பெற்ற இத்தலத்திற்கு செண்பகவனம்,கிரிகன்னிகைவனம் போன்ற பெயர்களும் உண்டு.நாகமகிய ராகு வழிப்பட்டமையால் "திருநாகேஸ்வரர்" என்று திருப்பெயர் உண்டாகி நாகநாதஸ்வாமி என்றும் நிலையாகிவிட்டது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 10 நிமி 16 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Tuesday, September 4, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #23 (அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்,திருநள்ளாறு) |

அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்,திருநள்ளாறு கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
நள்ளாறு என்பதற்கு ஆறுகளின் மத்தியில் உள்ள பகுதி என்று பொருள்.அரிசொல் மற்றும் வாஞ்சை ஆறு எனும் இரண்டு ஆறுகள் இத்தலத்தின் தெற்கிலும் வடக்கிலும் ஓடுவதால் இத்தலத்திற்கு திருநள்ளாறு என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறுவார்கள்.அருள்மிகு பிராணேஸ்வரி சமேத தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் புராதனப் பெருமை வாய்ந்த ஆலயம் என்றாலும் இங்குள்ள சனீஸ்வர பகவான்
சந்நிதிதான் மிகவும் பிரசித்தமானது.
கும்பகோணத்தில் இறங்கினால் 38 கி.மி தொலைவில் உள்ளது திருநள்ளாறு.கும்பகோணம் செல்லும் பாதையில் காரைக்கால்-மயிலாடுதுறை பேருந்து தடத்தில் உள்ளது.மயிலாடுதுறையிலிருந்தும் பஸ் வசதிகள் உண்டு.
இறைவன் : தர்ப்பாரண்யேஸ்வரர்
இறைவி : பிராணேஸ்வரி
ஷேத்திர கதாநாயகர் : சனி
தானியம் : எள்
மலர் : வன்னி,கருப்பு குவளை
வஸ்திரம் :கருப்பு நிற ஆடை
ரத்தினம் : நீலம்
வாகனம் :காக்கை
தீர்த்தம் : நள தீர்த்தம்
தரிசன நேரம் : காலை 5 - 12 மாலை 4 - 9.00
ஆலயத்தின் இராஜகோபுரம் கிழக்கு நோக்கி இருக்கிறது.உள்ளே கொடிமரம்,முன் மண்டபத்தை கடந்து வந்தால் இடப்பக்கம் விநாயகரும் வலப்பக்கம் நந்தியும் குடி கொண்டிருக்கிறார்கள்.
ஆலயத்தின் உள்ளே முதலில் இருப்பது இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் .அடுத்தது அன்னை பிராணேஸ்வரியின் ஆலயம்.தென்புற வாசல் வழியாக வந்தால் தியாகராஜர் சந்நிதி.நீலோத்பலாம்பாள் சகித ஸ்ரி நகவிடங்க செண்பக தியாகேசர் திருவருள் புரிகிறார்.அற்புத அருள்கொண்ட மரகதலிங்கத் திருமேனியும் கவர்கிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 10 நிமி 58 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, August 26, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #22 (அருள்மிகு அக்னீஸ்வரர் ஆலயம்,கஞ்சனூர்) |

அருள்மிகு அக்னீஸ்வரர் ஆலயம்,கஞ்சனூர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
நவக்கிரகங்களில் ஆறாவது கிரகமாக விளங்குபவர் சுக்ர பகவான்.சப்த ரிஷிகளில் ஒருவரான பிருகு முனிவருக்கும் கியாதி என்ற பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர்.தேவகுருவான பிரகஸ்பதிக்கு நிகராக சகல கலைகளிலும்,சாஸ்திரங்களிலும் வல்லவர்.சிவபெருமானைக் குறித்து தவம் இருந்து "மிருத சஞ்சீவினி" வரத்தை பெற்றவர்.சுக்ர பகவானின் பரிகார தலமான கஞ்சனூர்.
கும்பகோணத்தில் இறங்கினால் கிழக்கில் 18 கி.மி தொலைவில் உள்ளது கஞ்சனூர்.கும்பகோணத்திலிருந்து 2A,2B,38,54 போன்ற நகர பேருந்துகள் கஞ்சனூர் செல்லும்.மயிலாடுதுறையிலிருந்தும் பஸ் வசதிகள் உண்டு.
இறைவன் : அக்னீச்வரர்
இறைவி : கற்பகாம்பிகை
ஷேத்திர கதாநாயகர் : சுக்ரன்
தானியம் :மொச்சை
மலர் : வெண்தாமரை
வஸ்திரம் :வெள்ளைநிற ஆடை
ரத்தினம் : வைரம்
உலோகம் : வெள்ளி
தரிசன நேரம் : காலை 8 - 12 மாலை 4 - 8.00
ஆலயத்தின் இராஜகோபுரம் தெற்கு நோக்கி இருக்கிறது.உள்ளே கொடிமரம்,முன் மண்டபத்தை கடந்து வந்தால் இடப்பக்கம் விநாயகரும் வலப்பக்கம் காசி விஸ்வநாதர்,விசாலாட்சியும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள்.
ஆலயத்தின் உள்ளே முதலில் இருப்பது அன்னை கற்பகாம்பிகையின் ஆலயம்.அடுத்தது இறைவன் அக்னீச்வரரின் ஆலயம்.இரண்டுமே கிழக்கு நோக்கி தான் உள்ளன.மேற்கு பக்கமாக நந்தி மற்றும் நடராஜர்,நவக்கிரக பீடம்,சனி பகவான் ஆகியோர் உள்ளனர்.இத்தலத்தில் முன்று இடங்களில் முன்று சனீஸ்வரர் திருஉருவச் சிலைகள் இருப்பதும் விசேஷம்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 8 நிமி 33 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, August 19, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #21 (அருள்மிகு ஆபத்ஸஹாயேஸ்வரர் ஆலயம்,ஆலங்குடி) |

அருள்மிகு ஆபத்ஸஹாயேஸ்வரர் ஆலயம்,ஆலங்குடி கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
பஞ்சாரண்யத் தலங்களில் ஒன்றான ஆலங்குடிக்கு காசி ஆரண்யம் என்றும் திருஇரும்பூளை என்றும் பெயர்கள் உண்டு. இத்தலத்தில் கோயில்கொண்டிருக்கும் இறைவன் மூலவர்
ஆபத்ஸஹாயேஸ்வரர். இறைவியின் பெயர் ஏலவார் குழல் அம்பிகை. நவக்கிரகத் தலங்களில் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது ஆலங்குடி.
தலம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் வலங்கைமான் வட்டத்தில் இருக்கிறது ஆலங்குடி. நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ தூரத்திலும் கும்பகோணம் ம்ன்னர்குடி சாலையில்
(நீடாமங்கலம் வழி) கும்பகோணத்திலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவிலும் உள்ளது. தலவிருட்சம் பூளைச் செடி. இரனால் இத்தலத்திற்கு திரு இரும்பூளை என்ற பெயர் உண்டாயிற்று.
இறைவன் : ஆபத்ஸஹாயேஸ்வரர்
இறைவி : ஏலவார் குழல் அம்பிகை
ஷேத்திர பாலகர் : குரு
வாகனம் : யானை
தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 8:30
சம்பந்தர், அப்பர், சுந்தரர், மூவராலும் பாடல் பெற்ற தலம் ஆலங்குடி. இறையருளால் சுந்தரர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பூலோகத்தில் மீண்டும் பிறந்து தேவாரம் பாடி தமிழ் மணம் பரப்பி
சைவத் தொண்டில் ஈடுபட்டார். இத்தலத்திருகுச்
சுந்தரர் வந்தபோது காவிரியாகிய வெட்டாறு வெள்ளப்பெருக்கெடுத்தோடியது. இறைவனே ஓடக்காரனாக வந்து திருவிளையாடல் புரிந்து
சுந்தரரையும் உடன் வந்த அடியார்களையும் கைப்பற்றிக் கப்பாற்றியதாக வரலாறு. படகு ஆற்றில் அமிழ்ந்த இடம் ’அமிழ்ந்தீஸ்வரம்’ என்றும், படகு பாறையில் மோதி உடைந்த இடம்
’கப்பலுடையான்’ என்றும், இறைவன் கைப்பிடித்துக் காப்பாற்றிய இடம் ’கைப்பத்தூர்’ என்றும் இப்போதும் விளங்குகின்றன.
இத்திருத்தலத்தின் பெருமையும் தலபுராண வைபவமும் மிகவும் சிரேஷ்டமாக விளங்குகிறது. இக்கோவிலில் பஞ்சபருவ உற்சவமும் - மாதாந்திர குருவாரம் தோறும் நடைபெறும் விசேஷ
தரிச்ன்மும் - குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மறுராசிக்கு பிரவேசிக்கும் புண்ணிய காலங்களிலும் - மாசி மாதம் வரும் குருவாரமும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. சித்திரை
பௌர்ணமியை முதற்கொண்டு பத்து நாள் உற்சவம், தக்ஷிணாமூர்த்தி தேர்த் திருவிழாவுடன் கொண்டாடப்படுகிறது. தைபூசம், பங்குனி உத்திரத்தில் தீர்த்தவாரியும் நடைபெறும்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 9 நிமி 17 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, July 29, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #18 (அருள்மிகு கைலாசநாதர் ஆலயம்,திங்களூர்) |



அருள்மிகு கைலாசநாதர் ஆலயம்,திங்களூர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
நவக்கிரகங்களில் சூரியனுக்கு அடுத்ததாக கருதப்படுவது சந்திரன்.தேவர்களும் அசுரகளும் மந்தார மலையை மத்தாக அமைத்து வாசுகி எனும் பாம்பைக் கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்த போது பல பொருள்கள் கிடைத்தன.அவ்வாறு கிடைத்த பொருள்களில் ஒருவர் தான் சந்திரன்.சந்திரன், திருமாலின் மார்பில் உதித்தவன் என்றும் அத்திரி முனிவருக்கு அனுசுயா தேவி மூலம் பிறந்தவர் என்றும் கூறுவதுண்டு.
திங்களூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் சுமார் 5 கிமி தொலைவில் உள்ளது.
இறைவன் : கைலாசநாதர்
இறைவி : பெரியநாயகி
ஷேத்திர பாலகர் : சந்திரன்
வாகனம் : வெள்ளை குதிரை
தரிசன நேரம் : காலை 7 - 12 மாலை 4 - 8
திங்களூர் கோவில் ஸ்தலத்தில் இராஜகோபுரம் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது.உள்ளே தென்மேற்கு மூலையில் விநாயகரும், வடமேற்கு கஜல்ட்சுமியும், வடக்கு ப்க்கம் துர்க்காதேவியும்,ச்ண்டிகேஸ்வரரும் காட்சி தருகிறார்கள்.கிழக்கில் இடதுபுறத்தில் ஷேத்திர பாலகர் சந்திரன் சந்நிதி இருக்கிறது.தெற்கு வழியாக மண்டபத்தில் நுழைந்தால் அப்பூதி அடிகள்,அவர் குடும்பத்தார் திருஉருவச்சிலைகளும்,வலது புறம் திருநாவுக்கரசு சுவாமிகளின் திருஉருவச்சிலையும் உள்ளன.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 8 நிமி 33 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, July 15, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #16 (ஸ்ரீ வல்வில் இராமர் திருகோவில் திருப்புள்ளம் பூதங்குடி) |

ஸ்ரீ வல்வில் இராமர் திருகோவில் திருப்புள்ளம் பூதங்குடி கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது
எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சோழ நாட்டு திருப்பதிகளில் ஒன்றான இத்திருத்தலம் தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில்
சுவாமிமலையிலிருந்து 5 கி.மி தொலைவில் உள்ளது.
மூலவர் : வல்வில் இராமர் : புஜங்க சயனம் ,கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : ஹேமாம்புஜவல்லி பொற்றாமறையாள்
தீர்த்தம் : ஜடாயு ,கிரதபுரம்
விமானம் : சோபன விமானம்
இராவணன் சீதையை கவர்ந்து சென்ற போது அவனை எதிர்த்து போரிட்ட சடாயு ,இராவணன் வாளினால்
துண்டிக்கப்பட்டு ராமா ராமா என்ற சத்தத்துடன் மரணபடுக்கையில் கிடக்க, அவ்வழியே வ்ந்த இராம
லட்சுமணர்கள் இக்குரல் கேட்டு அருகில் சென்று பார்க்க,சீதையை இராவணன் கவர்ந்து சென்ற விவரத்தை
தெரிவித்து விட்டு உயிர் துறந்தார்.இராமர் அவருக்கு இருதி கடன் செய்த தலம்.திருமங்கையாழ்வாரால் 10
பாடலால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் டவுன்லோட் ஸ்ரீ வல்வில் இராமர் திருகோவில் திருப்புள்ளம் பூதங்குடி
Sunday, July 8, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #15 (ஸ்ரீ ஸ்ரீனிவாஸ பெருமாள் திருகோவில் திருக்குளந்தை) |

ஸ்ரீ ஸ்ரீனிவாஸ பெருமாள் திருகோவில் திருக்குளந்தை கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
ஸ்ரீ மாயக்கூத்தன் (அ) சோரநாதன் திருகோவில், பெருங்குளம்
நவதிருப்பதிகளில் ஒன்றான இத்திருத்தலம் திருப்புளிங்குடியிலிருந்து நேராகச் செல்லும் சாலையில் சுமார் 6 மைல் தொலைவில் உள்ளது.ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 7 மைல் தூரம் ஏரல் செல்லும் பேருந்தில் சென்றும் இறங்கலாம்.திருக்குளந்தை பெருங்குளம் என்ற பெயரில் இப்போது விளங்குகிறது.
மூலவர் : சோரநாதன் ஸ்ரீனிவாஸ பெருமாள் : நின்ற திருக்கோலம் ,கிழக்கே திருமுக மண்டலம்
உற்சவர் : மாயக்கூத்தர்
தாயார் : குளந்தைவல்லித்தாயார் அலமேலு மங்கைத்தாயார் என்ற இரண்டு உபய நாச்சியார்கள்
தீர்த்தம் : பெருங்குளம்
விமானம் : ஆனந்த நிலய விமானம்
பெருமாள் நெஞ்சில் கமலாதேவி இடம் பெற்றுள்ள திருக்காட்சியும் இங்கு காணலாம்.சோரனான (அஸ்மாசரன் மீது) நர்த்தனம் புரிந்ததால் இப்பெருமானுக்கு சோரநாதன் என்று திருநாமம் ஏற்பட்டது.நம்மாழ்வாரால் மட்டும் ஒரே ஒரு பாடலால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம்.
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Wednesday, June 6, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# 13 (அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் திருக்கோவில்,ஆம்புர் ) |

அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் திருக்கோவில்,ஆம்புர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
இந்த ஆலயத்தில் குடிகொண்டு இருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிகள் சுயம்பு ஆஞ்சநேயராக சுமார் 11 அடி உயரம் கொண்டு அருங்காட்சி அளித்து வருகின்றார்.ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிகள் தெற்கு நோக்கி இருந்தாலும் கிழக்கு நோக்கி பார்வை செலுத்தி வருகின்றார்
1489 ஆம் ஆண்டு விஜய நகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் நமது நாட்டை ஆண்ட போது பலிஜா சமூகத்தினரின் அன்பான வேண்டுகோளை ஏற்று இந்த ஆலயத்தை புதுப்பித்ததாக ஆலய கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
சனீஸ்வரனை தன் கால்களால் மிதித்து ஆணவத்தை அழித்த புண்ணிய ஸ்தலம் தான் ஆம்புர்
பெரிய ஆஞ்சநேயர் திருக்கோவில்.
அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் ஒரு கால் பதித்த இடம் இதுவென்றும் மற்றொரு கால் பதித்த
இடம் ஆம்புர் நகரின் அருகே உள்ளே ஆனைமேடு என்று புராணம் கூறுகிறது.
மேலும் ஸ்தலபுராணம் மற்றும் இத்தலத்தை ப்ற்றி கேட்க
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# 12 (அப்பன் வெங்கடேசப்பெருமாள் திருக்கோவில்,திருமுக்கூடல்) |
அப்பன் வெங்கடேசப்பெருமாள் திருக்கோவில்,திருமுக்கூடல் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
காஞ்சிபுரம்- செங்கல்பட்டு சாலையில் காஞ்சியிலிருந்து 20 கி.மி. தொலைவில் உள்ள பழையசீவரத்தின் அருகில் உள்ளது லட்சுமி நரசிம்மர் ஆலயம்.இதன் எதிரில் பாலாறு,செய்யாறு,வேகவதியாறு ஆகிய மூன்று நதிகளும் கூடும் திருமுக்கூடலில் உள்ளது அப்பன் வெங்கடேசப்பெருமாள் திருக்கோவில்.
மூலஸ்தானத்தில் வலதுபுறம் பிருகு முனிவர் தவம் செய்யும் நிலையிலும் ,இடதுபுறத்தில் பூமாதேவியும் காட்சி கொடுக்கிறார்கள்.சங்கு சக்கரதாரியாய் அபய ஹஸ்தத்துடன் மூலவர் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.பெருமாளின் திருமார்பில் அலர்மேலு மங்கையும்,பத்மாவதி தாயாரும் காட்சியளிக்கிறார்கள்.ஆழ்வார்கள் சன்னிதியும் வரப்பிரஸாதியான கர்ண குண்டலத்துடன் கூடிய கர்ண குண்டல ஆஞ்சநேயர் சன்னிதியும் அமைந்துள்ளன.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சீவரம் பார்வேட்டைக்கு பழையசீவரம் எழுந்தருளும் போது அப்பன் வெங்கடேசப்பெருமாள் திருக்கோவிலுக்கும் எழுந்தருள்கிறார்.
மேலும் ஸ்தலபுராணம் மற்றும் இத்தலத்தை ப்ற்றி கேட்க
http://podbazaar.castmetrix.net/download/144115188075856842/1/TamilPodcast12VaaramOruAlayamVenkatesaPerumalThirukovilThiruMukkoodal.mp3
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# 11 (அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்,எட்டுகுடி) |
அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்,எட்டுகுடி கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் எட்டுகுடியில் உள்ளது அருள்மிகு சுப்ரம்ண்யசுவாமி திருக்கோவில்.நாகப்பட்டினம் நகரிலிருந்து தென்மேற்காக சீராவட்டம் என்னும் பிரிவு சாலையிலிருந்து மேற்கே 4 கீ.மீ தொலைவில் உள்ளது எட்டுகுடி.
மூலவர் முருகப்பெருமான் மூவிரு முகங்களுடனும், பன்னிரு கரங்களுடனும் திருவாட்சியுடன் வடக்கு பார்த்த மயிலின் மீது அமர்ந்த கோலத்தில் உள்ளது.இக்கோலம் அனைத்தும் மயிலின் இரு கால்களால் தாங்கி உள்ளது.மூலஸ்தான பின்புறம் பெருமாள் ஸ்ரிதேவி பூதேவியுடன் காட்சி தரும் தனி சன்னிதி உள்ளது.தென்பக்கம் பிரதான விநாயகர் சன்னிதி உள்ளது.
மேலும் ஸ்தலபுராணம் மற்றும் இத்தலத்தை ப்ற்றி கேட்க
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Monday, June 4, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# பத்து (ஸ்ரீ சர்வமங்கள ஸமேத பள்ளிக்கொண்டீஸ்வரர் ஆலயம் சுருட்டப்பள்ளி) |

ஸ்ரீ சர்வமங்கள ஸமேத பள்ளிக்கொண்டீஸ்வரர் ஆலயம் சுருட்டப்பள்ளி கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சென்னையிலிருந்து 56 கிமி தொலைவில் தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் சயன சிவமாக பள்ளிக்கொண்டீஸ்வரர் காட்சியளிக்கிறார்.
விஜய நகரத்து மன்னர் ஹரிஹர புக்கரால் பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகு இத்திருக்கோயில் கட்டப்பட்டதால் சைவத்திருமறையில் இடம்பெறவில்லை.
வால்மீகேஸ்வரர்(வால்மீகி பூஜித்த லிங்கம்) ராமலிங்கேஸ்வரர் (ராமர் பூஜித்த லிங்கம்) லிங்கோத்பவர்( லிங்கதில் சிவன் நிற்கிறார்) ,கௌரி ஸ்மேத தக்சிணாமூர்த்தி மற்றும்
சப்த மாதாக்களும் இத்திருக்கோயிலின் சிறப்பு.
இத்திருக்கோயிலில் பள்ளிக்கொண்டீஸ்வரர் சர்வமங்கள (பார்வதி) மடியில் சயனத்தில் காட்சியளிக்கிறார்.இதே போல் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை பார்க்கலாம்.சிவனை இங்கே (சுருட்டப்பள்ளி) மட்டும் தான் காண முடியும்.இங்கே மஹா பிரதோஷம் மற்றும் மஹாசிவராத்திரி மிகவும் சிறப்பு.
மேலும் ஸ்தலபுராணம் மற்றும் இத்தலத்தை ப்ற்றி கேட்க
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
ஸ்ரீ சர்வமங்கள ஸமேத பள்ளிக்கொண்டீஸ்வரர் ஆலயம் சுருட்டப்பள்ளி
Monday, May 28, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# ஒன்பது (அருள்மிகு வக்ரகாளியம்மன் திருக்கோயில்) |
அருள்மிகு வக்ரகாளியம்மன் திருக்கோயில் திருவக்கரை கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம்.ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன்,பார்வதி,பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புத பதி.வடக்கு நோக்கிய வக்ர காளியும் மேற்கு நோக்கிய வக்ர லிங்கமும் தெற்கு நோக்கிய சனியும் காட்சி தரும் ஊர் திருவக்கரை.
சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் முகம் கொண்ட லிங்கம் மும்முக லிங்கம் அனப்படும். இந்த முகங்களில் கிழக்கில் உள்ளது தத்புருஷ முகம், தெற்கில் உள்ளது அகோர முகம், வடக்கில் உள்ளது வாமதேவ முகம் என்று சொல்லப்படும். மூன்று முகங்களை உடைய இத்தகைய லிங்கத்தை பிரம்மா, விஷ்னு, ருத்ரன் ஆகியோரின் முகங்களை உடைய லிங்கம் என்று கூறுவர். இத்தகைய திருமூர்த்தி லிங்கம் கோவில் கருவறையில் உள்ள சிறப்பைப் பெற்ற தலம் திருவக்கரை ஆகும்.
ஆறடி ஊயரத்தில் வரதராஜ பெருமாள் கம்பீரமாக காட்சி அளிக்கிறார்.இறைவி அம்ருதாம்பிகை.
திருவக்கரை என்றதும் நினைவுக்கு வருவது வக்ரகாளியம்மன்.சாதாரணமாக காளி கோயில் ஊர் எல்லையில் இருக்கும்.ஆனால் இங்கோ திருக்கோயில் வளாகத்துக்குள் குடி கொண்டு உள்ளார்.
மேலும் இத்தலத்தை ப்ற்றி கேட்க
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Tuesday, May 22, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# எட்டு (ஸ்ரீ வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில்) |

ஸ்ரீ வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
அறுனகிரிநாதர் இத்தலத்தை "கோடை நகர் " என்று திருப்புகழில் குறிப்பிடுகிறார். முருகன் வள்ளி தெய்வானையுடன்
"ஏழு" அடி உயரத்தில் கம்பீரமாக ,தெய்வீகமாக காட்சி அளிக்கிறார்.
மேலும் இத்தலத்தை ப்ற்றி கேட்க
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Friday, May 18, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்ஏழு (ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை சமெத முல்லைவனநாதர் திருகோவில் திருக்கழுகாவுர்) |

ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை சமெத முல்லைவனநாதர் திருகோவில் திருக்கழுகாவுர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை சமெத முல்லைவனநாதர் திருகோவில் திருக்கழுகாவுர்
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் ஆறு (ஸ்ரீ வெள்ளை விநாயகர் ஆலயம் திருவலஞ்சுழி) |
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் ஐந்து (ஸ்ரீ திருமேனீஸ்வரர் திருக்கோவில் கோவுர் ) |
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் நான்கு (ஸ்ரீ குருங்காலீஸ்வரர் ஆலயம் கோயம்பேடு சென்னை) |


