
அருள்மிகு அபயாம்பிகை ஆலயம், மயிலாடுதுறை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
மயிலாடுதுறை நகரின் மத்தியில் மாயூரநாதசுவாமி- அபயாம்பிகை திருக்கோயில் அமைந்துள்ளது.
தற்போதய பெயர் : மயிலாடுதுறை
இறைவன் : மாயூரநாதசுவாமி
இறைவி : அபயாம்பிகை
தீர்த்தம் : பிரம்மதீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:30 மணிமுதல் 8 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
அம்பிகை மயில் உருவத்தில் இறைவனைப் பூஜீத்து திருமணம் செய்து கொண்ட ஸ்தலமாதலால் மயிலாடுதுறை என்று பெயர் பெற்றது. ஐப்பசி மாதத் திருவிழாவின் போது அம்பிகை மயில் உருவமாக வழிப்பட்ட ஐதீக விழா நடைபெறுகிறது. துலா ஸ்னானத்திற்கு புகழ்ப்பெற்றது மயிலாடுதுறை . ஐப்பசி மாதத்து அமாவாசையன்று (தீபாவளி) கங்கை,யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகளும் மயிலாடுதுறையில் காவிரியின் இடப தீர்த்தத்தில் நீராடியதாக ஐதீகம்! இதனால் தீபாவளியன்று காவிரி நீரில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Monday, September 1, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #75 அருள்மிகு அபயாம்பிகை ஆலயம், மயிலாடுதுறை |
Sunday, February 3, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #45-அருள்மிகு வாலீஸ்வரர் ஆலயம், திருக்காரிக்கரை |

அருள்மிகு வாலீஸ்வரர் ஆலயம், திருக்காரிக்கரை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கப்படும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சென்னை புத்தூர் நெடுஞ்சாலையில் நாகலாபுரம் - பிச்சாட்டூர் இடையில் உள்ளது.திருவள்ளூரிலிருந்து சுமார் 50 கிமி தொலைவில் உள்ளது.திருவள்ளூரிலிருந்து பேருந்து வழியாகச் சென்றால் ஊத்துக்கோட்டை,நாகளாபுரம் ஊர்களுக்கு அடுத்து திருக்காரிக்கரை வரும்.
தற்போதய பெயர் : ராமகிரி
இறைவன் : வாலீஸ்வரர்
இறைவி : மரகதாம்பிகை
தலமரம் : அரசமரம்
தீர்த்தம் : நந்திதீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்,திருநாவுக்கரசு சுவாமிகள்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 11மணி வரை, மாலை 3 மணிமுதல் 6 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலை 7 மணி
ராமருக்காக அனுமன் கொண்டுவந்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாலும்,மடுவை மலையாக (கிரியாக) மாற்றியதாலும் காளிங்க-மடுகரை -திருக்காரிக்கரை என மாறியது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, December 9, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #37 - அருள்மிகு இடைச்சுரநாதர் ஆலயம், திருஇடைச்சுரம் |

அருள்மிகு இடைச்சுரநாதர் ஆலயம், திருஇடைச்சுரம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
செங்கல்பட்டிலிருந்து மகாபலிபுரம் செல்லும் பேருந்து சாலையில் திருப்போருர் செல்லும் பாதையில் 4-வது கி.மி-ல் இத்தலத்தை அடையலாம்.
தற்போதய பெயர் : திருவடிசூலம்
இறைவன் : இடைச்சுரநாதர்,ஞானப்புரீஸ்வரர்
இறைவி : கோபர்த்தனாம்பிகை
தலமரம் : இலுப்பை
தீர்த்தம் : சனத்குமாரதீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:30 மணிமுதல் 8 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
சிவபெருமான் இடையனாக வந்து திருஞான சம்பந்தத்ரை அழைத்துச் சென்றதால் திருஇடைச்சுரம் என்று வழங்கப்படுகிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, December 2, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #36 அருள்மிகு திருமாகறலீஸ்வரர் ஆலயம், திருமாகறல் |

அருள்மிகு திருமாகறலீஸ்வரர் ஆலயம், திருமாகறல் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
காஞ்சீபுரத்திலிருந்து உத்திரமேரூர் பேருந்து பாதையில் உள்ளது. வழி ஓரிக்கை சாலையோரத்தில் கோயில் உள்ளது.
இறைவன் : திருமாகறலீஸ்வரர், உடும்பீசர், அகத்தீஸ்வரர்
இறைவி : திரிபுவன நாயகி
தலமரம் : எலுமிச்சை
தீர்த்தம் : அக்னிதீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தற்போதைய பெயர் : திருமாகறல்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:30 மணிமுதல் 8 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; உச்சிகாலம் பகல் 12 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி; அர்த்த சாமபூஜை இரவு 8 மணி வரை.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, October 14, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #29 (அருள்மிகு சனி பகவான் ஆலயம்,குச்சனூர்) |

அருள்மிகு சனி பகவான் ஆலயம்,குச்சனூர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சுயம்பு வடிவத்தில் தோன்றிய சனீஸ்வர பகவான் இந்தியாவிலேயே இவர் ஒருவர் தான்.தேனி நகரத்திலிருந்து தெற்கே 20 கி.மி தூரத்தில் உள்ளது குச்சனூர்.குச்சனூர் கிராமம் முல்லையாற்றுக் கரையில் அமைந்திருக்கிறது.செண்பக மரங்கள் கொண்ட சோலையாக இருந்தபோது செண்பகநல்லூர் எனப் பெயர் கொண்டது.குச்சுப்புல் குடிலில் சுயம்புவாகக் காட்சியளித்த சனி பகவானை ’குச்சன்’ என்றும் அழைத்தனர்.நாளிடைவில் குச்சனூர் என மாறி நிலைத்துவிட்டது.சனி பகவானை குச்சனூரான் என்றும் அழைப்பதுண்டு.
ஷேத்திர கதாநாயகர் : சனி
தானியம் : எள்
மலர் : வன்னி,கருப்பு குவளை
வஸ்திரம் :கருப்பு நிற ஆடை
ரத்தினம் : நீலம்
வாகனம் :காக்கை
தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 8.30
ஆடி சனி தோறும் விழாக்கோலம் .மூன்றாம் சனிக்கிழமை சனி பகவானின் திருக்கல்யாணம்.சுயம்பு மூலவருக்கு வெள்ளிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் அபிஷேகம்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 10 நிமி 58 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, September 30, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #27 (ஸ்ரீ ஸாரநாதர் ஆலயம்,திருச்சேறை) |

ஸ்ரீ ஸாரநாதர் ஆலயம்,திருச்சேறை கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சோழ நாட்டு திருப்பதிகளில் ஒன்றான இத்திருத்தலம் கும்பகோணத்திலிருந்து குடவாசல் வழியாக திருவாருர் செல்லும் வழியில் உள்ளது.
மூலவர் : ஸாரநாதர் : கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார் : ஸாரநாயகி
தீர்த்தம் : ஸாரபுஷ்கரிணி
விமானம் : ஸாரவிமானம்
108 திவ்ய ஸ்தலங்களில் இத்திருத்தலம் தவிர பெருமாள் தனது 5 தேவிகளுடன் காட்சி தருவது வேறு எந்த ஸ்தலத்திலும் இல்லை.இங்குள்ள மூலவர் தனது வலது கையில் பத்மம் வைத்துள்ள
காட்சி பரமபதம் எனப்படும்.குடந்தையில் உள்ள சித்திரத்தேர் திருவாருர்த்தேரினைப் போன்ற இங்கு உள்ள தேர் மிகப் பெரியதாகும்.திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம் செய்துள்ளார்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, September 23, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #26 (ஸ்ரீ கஜேந்திரவரதர் ஆலயம்,திருக்கவித்தலம்(கபிஸ்தலம்)) |

ஸ்ரீ கஜேந்திரவரதர் ஆலயம்,திருக்கவித்தலம் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சோழ நாட்டு திருப்பதிகளில் ஒன்றான இத்திருத்தலம் தஞ்சையிலிருந்து திருவையாறு வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது.பாபநாசம் ரயில்நிலையத்திலிருந்து 3 கி.மி தொலைவில் உள்ளது.
மூலவர் : கஜேந்திரவரதர் : புஜங்க சயனம் ,கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : ரமாமணவல்லி(பொற்றாமறையாள் )
தீர்த்தம் : கஜேந்திரபுஷ்கரிணி ,கபிலதீர்த்தம்
விமானம் : ககநாக்ருத விமானம்
இக்கபிஸ்தலத்தில் உள்ள கோவிலின் முன்பு அமைந்துள்ள கபில தீர்த்தம் எனும் குளத்தில் ஒருநாள் கஜேந்திரன்(யானை) நீரருந்த இறங்கும் போது முதலை கவ்வ,யானை பிளிற,கருட வாகனத்தில் வந்த மகா விஷ்ணு தம் சக்ராயுதத்தால் முதலையைக் கொன்று யானைக்கு மோட்சமளித்ததாக வரலாறு.கஜேந்திர மோட்சம் பங்குனி மாதத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, September 16, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #25 (அருள்மிகு கேது,நாகநாதஸ்வாமி ஆலயம்,கீழப்பெரும்பள்ளம்) |

அருள்மிகு கேது,நாகநாதஸ்வாமி ஆலயம்,கீழப்பெரும்பள்ளம் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
கேது ஞானத்தை கொடுக்கக் கூடியவர்.ஞானம்.மோட்சம்,புனித நீராடல்,அயல்நாட்டுப் பயணம்,கடின உழைப்பு,வைத்தியர்,தீ விபத்து,தோல் வியாதி,ஜுரம் - இப்படி பலவற்றிற்கு காரணமாக இருப்பவர் கேது.கேது பகவானின் அதிதேவதை பிரம்மா,சித்திரகுப்தன்.விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடுவது,கொள்ளு தானம் செய்வது போன்றவை கேது ப்ரீத்தியாகும்.
தலம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் பாதையில் தர்மகுளம் என்று ஒரு சிற்றூர்.இதற்கு தெற்கே 2 கி.மி. தொலைவில் உள்ளது கீழப்பெரும்பள்ளம் நாகநாதஸ்வாமி ஆலயம்.
இறைவன் : நாகநாதஸ்வாமி
இறைவி : சௌந்தர்யநாயகி
ஷேத்திர பாலகர் : கேது
வாகனம் : கழுகு
நிறம் : சிவப்பு
தானியம் : கொள்ளு
மலர் : செவ்வரளி
ரத்தினம் : வைடூர்யம்
தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 7
ஆலயம் கிழ்க்கு நோக்கி உள்ளது.கிழ்க்கு கோபுர வாசல் முன்பு நாக்தீர்த்தம் உள்ளது.வாசுகி பாம்பு நாக்நாதஸ்வாமியை வழிபட்டு வந்தபோது அமைந்த தீர்த்தம் என்கிறார்கள்.விக்கிரம சோழன் கல்வெட்டில் இத்தலம் திருவலபுரம் எனக் குறிப்பிடப்பட்டிறிக்கிறது.இத்தலத்தின் ஸ்தல விருக்ஷ்ம் மூங்கில்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 10 நிமி 16 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு கேது,நாகநாதஸ்வாமி ஆலயம்,கீழப்பெரும்பள்ளம்
Sunday, September 9, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #24 (அருள்மிகு நாகநாதர் ஆலயம்,திருநாகேஸ்வரம்) |

அருள்மிகு நாகநாதர் ஆலயம்,திருநாகேஸ்வரம் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
திருநாகேஸ்வரம் நவக்கிரகங்களில் ராகு பகவானின் தலம்.ஒருவரது யோகம்,பதவி,தொழில்,வளமான வாழ்வு,எதிர்ப்பை வெல்லல்,வறுமை நீங்க,கடன் தீர,சக்தீ ஆகியவற்றை தர வல்லவர் ராகு .ராகு யோகத்திற்கு அதிபதி.ராகுவையும்,கேதுவையும் முறைப்படி கிரகங்கள் என்று அழைப்பதில்லை.இவற்றை சாயா கிரகங்கள் என்று சொல்லுவார்கள்.
தலம்: கும்பகோணதிலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் உள்ளது இத்தலம்.தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணதிலிருந்து கிழக்கே 5 கி.மி தொலைவில் உள்ளது
இறைவன் : நாகநாதர்,அர்த்த நாரீசர்
இறைவி : பிறையணிவாள்நுதலம்மை,கிரிகுஜாம்பிகை
ஷேத்திர பாலகர் : ராகு
வாகனம் : நீல சிங்கம்
நிறம் : கருமை
தானியம் : உளுந்து
மலர் : மந்தாரை
ரத்தினம் : கோமேதகம்
உலோகம் : கருங்கல்
தரிசன நேரம் : காலை 5 - 12 மாலை 4 - 9
அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று பன்னிரெண்டு சுவாமி புஷ்கரணிகள். சேக்கீழார் சுவாமிகளால் திருப்பணிகள் செய்யப்பெற்ற இத்தலத்திற்கு செண்பகவனம்,கிரிகன்னிகைவனம் போன்ற பெயர்களும் உண்டு.நாகமகிய ராகு வழிப்பட்டமையால் "திருநாகேஸ்வரர்" என்று திருப்பெயர் உண்டாகி நாகநாதஸ்வாமி என்றும் நிலையாகிவிட்டது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 10 நிமி 16 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Tuesday, September 4, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #23 (அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்,திருநள்ளாறு) |

அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்,திருநள்ளாறு கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
நள்ளாறு என்பதற்கு ஆறுகளின் மத்தியில் உள்ள பகுதி என்று பொருள்.அரிசொல் மற்றும் வாஞ்சை ஆறு எனும் இரண்டு ஆறுகள் இத்தலத்தின் தெற்கிலும் வடக்கிலும் ஓடுவதால் இத்தலத்திற்கு திருநள்ளாறு என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறுவார்கள்.அருள்மிகு பிராணேஸ்வரி சமேத தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் புராதனப் பெருமை வாய்ந்த ஆலயம் என்றாலும் இங்குள்ள சனீஸ்வர பகவான்
சந்நிதிதான் மிகவும் பிரசித்தமானது.
கும்பகோணத்தில் இறங்கினால் 38 கி.மி தொலைவில் உள்ளது திருநள்ளாறு.கும்பகோணம் செல்லும் பாதையில் காரைக்கால்-மயிலாடுதுறை பேருந்து தடத்தில் உள்ளது.மயிலாடுதுறையிலிருந்தும் பஸ் வசதிகள் உண்டு.
இறைவன் : தர்ப்பாரண்யேஸ்வரர்
இறைவி : பிராணேஸ்வரி
ஷேத்திர கதாநாயகர் : சனி
தானியம் : எள்
மலர் : வன்னி,கருப்பு குவளை
வஸ்திரம் :கருப்பு நிற ஆடை
ரத்தினம் : நீலம்
வாகனம் :காக்கை
தீர்த்தம் : நள தீர்த்தம்
தரிசன நேரம் : காலை 5 - 12 மாலை 4 - 9.00
ஆலயத்தின் இராஜகோபுரம் கிழக்கு நோக்கி இருக்கிறது.உள்ளே கொடிமரம்,முன் மண்டபத்தை கடந்து வந்தால் இடப்பக்கம் விநாயகரும் வலப்பக்கம் நந்தியும் குடி கொண்டிருக்கிறார்கள்.
ஆலயத்தின் உள்ளே முதலில் இருப்பது இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் .அடுத்தது அன்னை பிராணேஸ்வரியின் ஆலயம்.தென்புற வாசல் வழியாக வந்தால் தியாகராஜர் சந்நிதி.நீலோத்பலாம்பாள் சகித ஸ்ரி நகவிடங்க செண்பக தியாகேசர் திருவருள் புரிகிறார்.அற்புத அருள்கொண்ட மரகதலிங்கத் திருமேனியும் கவர்கிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 10 நிமி 58 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, August 26, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #22 (அருள்மிகு அக்னீஸ்வரர் ஆலயம்,கஞ்சனூர்) |

அருள்மிகு அக்னீஸ்வரர் ஆலயம்,கஞ்சனூர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
நவக்கிரகங்களில் ஆறாவது கிரகமாக விளங்குபவர் சுக்ர பகவான்.சப்த ரிஷிகளில் ஒருவரான பிருகு முனிவருக்கும் கியாதி என்ற பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர்.தேவகுருவான பிரகஸ்பதிக்கு நிகராக சகல கலைகளிலும்,சாஸ்திரங்களிலும் வல்லவர்.சிவபெருமானைக் குறித்து தவம் இருந்து "மிருத சஞ்சீவினி" வரத்தை பெற்றவர்.சுக்ர பகவானின் பரிகார தலமான கஞ்சனூர்.
கும்பகோணத்தில் இறங்கினால் கிழக்கில் 18 கி.மி தொலைவில் உள்ளது கஞ்சனூர்.கும்பகோணத்திலிருந்து 2A,2B,38,54 போன்ற நகர பேருந்துகள் கஞ்சனூர் செல்லும்.மயிலாடுதுறையிலிருந்தும் பஸ் வசதிகள் உண்டு.
இறைவன் : அக்னீச்வரர்
இறைவி : கற்பகாம்பிகை
ஷேத்திர கதாநாயகர் : சுக்ரன்
தானியம் :மொச்சை
மலர் : வெண்தாமரை
வஸ்திரம் :வெள்ளைநிற ஆடை
ரத்தினம் : வைரம்
உலோகம் : வெள்ளி
தரிசன நேரம் : காலை 8 - 12 மாலை 4 - 8.00
ஆலயத்தின் இராஜகோபுரம் தெற்கு நோக்கி இருக்கிறது.உள்ளே கொடிமரம்,முன் மண்டபத்தை கடந்து வந்தால் இடப்பக்கம் விநாயகரும் வலப்பக்கம் காசி விஸ்வநாதர்,விசாலாட்சியும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள்.
ஆலயத்தின் உள்ளே முதலில் இருப்பது அன்னை கற்பகாம்பிகையின் ஆலயம்.அடுத்தது இறைவன் அக்னீச்வரரின் ஆலயம்.இரண்டுமே கிழக்கு நோக்கி தான் உள்ளன.மேற்கு பக்கமாக நந்தி மற்றும் நடராஜர்,நவக்கிரக பீடம்,சனி பகவான் ஆகியோர் உள்ளனர்.இத்தலத்தில் முன்று இடங்களில் முன்று சனீஸ்வரர் திருஉருவச் சிலைகள் இருப்பதும் விசேஷம்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 8 நிமி 33 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, August 19, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #21 (அருள்மிகு ஆபத்ஸஹாயேஸ்வரர் ஆலயம்,ஆலங்குடி) |

அருள்மிகு ஆபத்ஸஹாயேஸ்வரர் ஆலயம்,ஆலங்குடி கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
பஞ்சாரண்யத் தலங்களில் ஒன்றான ஆலங்குடிக்கு காசி ஆரண்யம் என்றும் திருஇரும்பூளை என்றும் பெயர்கள் உண்டு. இத்தலத்தில் கோயில்கொண்டிருக்கும் இறைவன் மூலவர்
ஆபத்ஸஹாயேஸ்வரர். இறைவியின் பெயர் ஏலவார் குழல் அம்பிகை. நவக்கிரகத் தலங்களில் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது ஆலங்குடி.
தலம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் வலங்கைமான் வட்டத்தில் இருக்கிறது ஆலங்குடி. நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ தூரத்திலும் கும்பகோணம் ம்ன்னர்குடி சாலையில்
(நீடாமங்கலம் வழி) கும்பகோணத்திலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவிலும் உள்ளது. தலவிருட்சம் பூளைச் செடி. இரனால் இத்தலத்திற்கு திரு இரும்பூளை என்ற பெயர் உண்டாயிற்று.
இறைவன் : ஆபத்ஸஹாயேஸ்வரர்
இறைவி : ஏலவார் குழல் அம்பிகை
ஷேத்திர பாலகர் : குரு
வாகனம் : யானை
தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 8:30
சம்பந்தர், அப்பர், சுந்தரர், மூவராலும் பாடல் பெற்ற தலம் ஆலங்குடி. இறையருளால் சுந்தரர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பூலோகத்தில் மீண்டும் பிறந்து தேவாரம் பாடி தமிழ் மணம் பரப்பி
சைவத் தொண்டில் ஈடுபட்டார். இத்தலத்திருகுச்
சுந்தரர் வந்தபோது காவிரியாகிய வெட்டாறு வெள்ளப்பெருக்கெடுத்தோடியது. இறைவனே ஓடக்காரனாக வந்து திருவிளையாடல் புரிந்து
சுந்தரரையும் உடன் வந்த அடியார்களையும் கைப்பற்றிக் கப்பாற்றியதாக வரலாறு. படகு ஆற்றில் அமிழ்ந்த இடம் ’அமிழ்ந்தீஸ்வரம்’ என்றும், படகு பாறையில் மோதி உடைந்த இடம்
’கப்பலுடையான்’ என்றும், இறைவன் கைப்பிடித்துக் காப்பாற்றிய இடம் ’கைப்பத்தூர்’ என்றும் இப்போதும் விளங்குகின்றன.
இத்திருத்தலத்தின் பெருமையும் தலபுராண வைபவமும் மிகவும் சிரேஷ்டமாக விளங்குகிறது. இக்கோவிலில் பஞ்சபருவ உற்சவமும் - மாதாந்திர குருவாரம் தோறும் நடைபெறும் விசேஷ
தரிச்ன்மும் - குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மறுராசிக்கு பிரவேசிக்கும் புண்ணிய காலங்களிலும் - மாசி மாதம் வரும் குருவாரமும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. சித்திரை
பௌர்ணமியை முதற்கொண்டு பத்து நாள் உற்சவம், தக்ஷிணாமூர்த்தி தேர்த் திருவிழாவுடன் கொண்டாடப்படுகிறது. தைபூசம், பங்குனி உத்திரத்தில் தீர்த்தவாரியும் நடைபெறும்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 9 நிமி 17 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, August 12, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #20 (அருள்மிகு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்,திருவெண்காடு) |
![]()
அருள்மிகு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்,திருவெண்காடு கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
திருவெண்காடு நவக்கிரகங்களில் புதனுடைய தலம்.கல்வி,அறிவு,பேச்சுதிறமை,இசை,சோதிடம்,கணிதம்,புலமை ஆகியவற்றை தர வல்லவர் புதன்.இவருக்கு வித்யாகாரகன் என்றும் பெயர். புதனுக்குப் பிடித்த நிறம் பச்சை. சாத்வீக குணம் சூரியனிடமிருந்து பிரகாசத்தை இழுத்து செடி, கொடிகளை பச்சை நிறமாக்கும் தன்மை உடையவர். பச்சைப் பயிறு தானியத்தை தானம் கொடுத்தால் ப்ரீதி அடைவார்.
தலம்: மயிலாடுதுறையிலிருந்து 25 கி.மீ., சீர்காழியில் இருந்து 10 கி.மீ., பூம்புகாரிலிருந்து 8 கி.மீ. பஸ் உண்டு.
இறைவன் : ஸ்வேதாரண்யேஸ்வரர்
இறைவி : பிரம்ம வித்யாம்பிகை
ஷேத்திர பாலகர் : புதன்
வாகனம் : குதிரை
தரிசன நேரம் : காலை 6 - 12 மாலை 4 - 9
சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் பாடிய பெருமை இத்தலத்திற்கு உண்டு. காசிக்கு இணையான ஆறுதலங்களுள் இதுவும் ஓன்று. இத்திருத்தலத்திற்கு சுவேதவனம் என்று பெயர் (சுவேதம் என்றால் வெண்மை. வனம் என்றால் காடு). இக்கோயிலில் சுவேதாரண்யர், அகோர முர்தி, நடராஜர் என்று மும் மூர்த்திகள். பிரம்மவித்யாம்பிகை, அஷ்டபுஜ துர்கை, காளி என்று மூன்று அம்பிகை சந்நதிகள். அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று மூன்று சுவாமி புஷ்கரணிகள். ஆலமரம், கொன்றை, வில்வம் என்று மூன்று தல விருக்ஷங்கள்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 8 நிமி 33 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, August 5, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #19 (அருள்மிகு வைத்தியநாதர் ஆலயம்,வைத்தீஸ்வரன் கோவில்) |

அருள்மிகு வைத்தியநாதர் ஆலயம்,வைத்தீஸ்வரன் கோவில் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
நவக்கிரகங்களில் சூரியசந்திரனுக்குஅடுத்ததாக கருதப்படுவது அங்காரகன் எனும் செவ்வாய்.செவ்வாய் தலங்களில் விசேஷமானவை புள்ளிருக்கு வேளூர்,சிறுகுடி ,பழனி முதலியவை.இவற்றுள் மிகப்
பிரமாதமானது புள்ளிருக்கு வேளூர்.புள்ளிருக்கு வேளூர் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது,வைத்தீஸ்வரன் கோவில் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும்.
நவக்கிரக மண்டலத்தில் சூரியனுக்குத் தெற்கில் மூன்றாவது கிரகமாக விளங்குபவர் செவ்வாய் (அங்காரகன்) அசுபகிரகம்.சிவபெருமானின் நெற்றி வியர்வையில் தோன்றி பூமாதேவியால்
வளர்க்கப்பட்டவர் என்பது ஒரு கருத்து.பராசர முனிவரின் மகனாக பிறந்து,பூமாதேவியால் வளர்க்கப்பட்டவர் என்பது இன்னொரு கருத்து.நர்மதை நதிக்கரையில் பரத்வாஜ முனிவரின் ஆத்ம
சக்தியால் தோன்றி பூமாதேவியால் வளர்க்கப்பட்டவர் என்பது இன்னொரு கருத்து.வீரபத்ரர் தக்ஷ்ன் யாகத்தை அழித்ததும் கோபம் தணிந்து ,அங்காரக வடிவம் பெற்றார் என்றும் சில புராணங்களில்
குறிப்பிடபட்டுள்ளன.
சிவப்பு நிறமான இவர்,ராஜ குணமுள்ளவர்.அழகானவர்.மாலினி ,சூலினி என்று இரண்டு மனைவிகள்.பெருந்தன்மை,நேர்மை,துணிவு,வைராக்யம் போன்ற நல்ல குணங்களைக் கொடுத்து
கவுரமும் அந்தஸ்தும் கிடைக்கச் செய்வார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி தாலுகாவில் இருக்கிறது வைத்தீஸ்வரன் கோவில் திருத்தலம்.சீர்காழி தலத்திலிருந்து 5 கி.மி. மயிலாடுதுறையிலிருந்து 13 கி.மி.
இறைவன் : வைத்தியநாதர்
இறைவி : தையல்நாயகி
ஷேத்திர பாலகர் : அங்காரகன்
வாகனம் : ஆட்டுகிடா
தரிசன நேரம் : காலை 7 - 12 மாலை 4 - 8.30
கிழக்கிலும் மேற்கிலும் ராஜகோபுரங்கள் இருந்தாலும்,மேற்கு கோபுர வாசல் வழியாகத்தான் அனைவரும் செல்கிறார்கள்.முலவரான வைத்தியநாதர்,சுயம்புலிங்கமாக எழுந்தருள்கிறார்.தீராத 4448
நோய்களை தீர்க்க ,கயிலாயத்திலிருந்து சிவ-பார்வதி பூலோகத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்தனர்.
இத்தலத்தில் அம்மை-அப்பருக்கு அடுத்தபடியாக சிறப்பு பூஜை பெறுபவர்கள் - செல்வமுத்துகுமாரசுவாமி என்றழைக்கப்படும் முருகர்.அடுத்தது அங்காரகன்."முத்தையா" என அன்பர்களால்
காதலுடன் அழைக்கப்படும் தேவியருடன் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் அங்காரகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால்,பட்டென்று தோஷம் விட்டுப்போகும்.
புள்ளிருக்கு வேளூர் என்பது தேவாரப் பாடல்களில் இடம்பெற்றுள்ள பழமையான பெயர்.ஜடாயு (புள்) பறவை ,ரிக்வேதம் (இருக்கு),முருகன் (வேள்),சூரியன் (ஊர்) - இந்த நால்வரும்
வழிபட்டதால் புள்ளிருக்கு வேளூர் என்று பெயர்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 8 நிமி 33 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, July 29, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #18 (அருள்மிகு கைலாசநாதர் ஆலயம்,திங்களூர்) |



அருள்மிகு கைலாசநாதர் ஆலயம்,திங்களூர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
நவக்கிரகங்களில் சூரியனுக்கு அடுத்ததாக கருதப்படுவது சந்திரன்.தேவர்களும் அசுரகளும் மந்தார மலையை மத்தாக அமைத்து வாசுகி எனும் பாம்பைக் கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்த போது பல பொருள்கள் கிடைத்தன.அவ்வாறு கிடைத்த பொருள்களில் ஒருவர் தான் சந்திரன்.சந்திரன், திருமாலின் மார்பில் உதித்தவன் என்றும் அத்திரி முனிவருக்கு அனுசுயா தேவி மூலம் பிறந்தவர் என்றும் கூறுவதுண்டு.
திங்களூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் சுமார் 5 கிமி தொலைவில் உள்ளது.
இறைவன் : கைலாசநாதர்
இறைவி : பெரியநாயகி
ஷேத்திர பாலகர் : சந்திரன்
வாகனம் : வெள்ளை குதிரை
தரிசன நேரம் : காலை 7 - 12 மாலை 4 - 8
திங்களூர் கோவில் ஸ்தலத்தில் இராஜகோபுரம் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது.உள்ளே தென்மேற்கு மூலையில் விநாயகரும், வடமேற்கு கஜல்ட்சுமியும், வடக்கு ப்க்கம் துர்க்காதேவியும்,ச்ண்டிகேஸ்வரரும் காட்சி தருகிறார்கள்.கிழக்கில் இடதுபுறத்தில் ஷேத்திர பாலகர் சந்திரன் சந்நிதி இருக்கிறது.தெற்கு வழியாக மண்டபத்தில் நுழைந்தால் அப்பூதி அடிகள்,அவர் குடும்பத்தார் திருஉருவச்சிலைகளும்,வலது புறம் திருநாவுக்கரசு சுவாமிகளின் திருஉருவச்சிலையும் உள்ளன.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 8 நிமி 33 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, July 22, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #17 (அருள்மிகு சிவசூரியநாராயணமூர்த்தி ஆலயம்,சூரியனார் கோவில்) |

அருள்மிகு சிவசூரியநாராயணமூர்த்தி ஆலயம் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
நவக்கிரகங்களில் முதன்மையாகக் கருதப்படுவது சூரியன்.வாரத்தின் முதல் நாளான ஞாயிறு சூரியனின் பெயரைக் கொண்டே ஏற்பட்டுள்ளது.சூரியன் காசிப முனிவருக்கு அதிதி பால் பிறந்தவர் என்பதால் அவருக்கு ஆதித்தன் என்ற பெயர் உண்டாயிற்று.
சூரியனார் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரியின் வடகரையில் உள்ளது.ஆடுதுறைக்கு தெற்கில் இரண்டு கி.மி தூரத்தில் சூரியனார் கோவில் உள்ளது.
இறைவன் : ஸ்ரீ சிவசூரியநாராயணமூர்த்தி
இறைவி : சாயாதேவி,உஷாதேவி
தீர்த்தம் : சூர்யப்புஷ்கரணி
ஸ்தலவிருக்ஷ்ம் : வெள்ளெருக்கு
தரிசன நேரம் : காலை 6 - 12.30 மாலை 4 - 8.30
சூரியனார் கோவில் ஸ்தலத்தில் சூரிய பகவான் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது.இராஜகோபுரத்திற்கு வெளியே சூர்யப்புஷ்கரணி என்ற மூன்று நிலைகளோடு ஐந்து கலசம் தாங்கி உயர்ந்து நிற்கிறது.சிவசூரியநாராயணமூர்த்தி இடதுபுறத்தில் உஷாதேவியும் வலதுபுறத்தில் சாயாதேவியும் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்கள்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 7நிமி 53 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு சிவசூரியநாராயணமூர்த்தி ஆலயம்,சூரியனார் கோவில்
Sunday, July 15, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #16 (ஸ்ரீ வல்வில் இராமர் திருகோவில் திருப்புள்ளம் பூதங்குடி) |

ஸ்ரீ வல்வில் இராமர் திருகோவில் திருப்புள்ளம் பூதங்குடி கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது
எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சோழ நாட்டு திருப்பதிகளில் ஒன்றான இத்திருத்தலம் தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில்
சுவாமிமலையிலிருந்து 5 கி.மி தொலைவில் உள்ளது.
மூலவர் : வல்வில் இராமர் : புஜங்க சயனம் ,கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : ஹேமாம்புஜவல்லி பொற்றாமறையாள்
தீர்த்தம் : ஜடாயு ,கிரதபுரம்
விமானம் : சோபன விமானம்
இராவணன் சீதையை கவர்ந்து சென்ற போது அவனை எதிர்த்து போரிட்ட சடாயு ,இராவணன் வாளினால்
துண்டிக்கப்பட்டு ராமா ராமா என்ற சத்தத்துடன் மரணபடுக்கையில் கிடக்க, அவ்வழியே வ்ந்த இராம
லட்சுமணர்கள் இக்குரல் கேட்டு அருகில் சென்று பார்க்க,சீதையை இராவணன் கவர்ந்து சென்ற விவரத்தை
தெரிவித்து விட்டு உயிர் துறந்தார்.இராமர் அவருக்கு இருதி கடன் செய்த தலம்.திருமங்கையாழ்வாரால் 10
பாடலால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் டவுன்லோட் ஸ்ரீ வல்வில் இராமர் திருகோவில் திருப்புள்ளம் பூதங்குடி
Sunday, July 8, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #15 (ஸ்ரீ ஸ்ரீனிவாஸ பெருமாள் திருகோவில் திருக்குளந்தை) |

ஸ்ரீ ஸ்ரீனிவாஸ பெருமாள் திருகோவில் திருக்குளந்தை கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
ஸ்ரீ மாயக்கூத்தன் (அ) சோரநாதன் திருகோவில், பெருங்குளம்
நவதிருப்பதிகளில் ஒன்றான இத்திருத்தலம் திருப்புளிங்குடியிலிருந்து நேராகச் செல்லும் சாலையில் சுமார் 6 மைல் தொலைவில் உள்ளது.ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 7 மைல் தூரம் ஏரல் செல்லும் பேருந்தில் சென்றும் இறங்கலாம்.திருக்குளந்தை பெருங்குளம் என்ற பெயரில் இப்போது விளங்குகிறது.
மூலவர் : சோரநாதன் ஸ்ரீனிவாஸ பெருமாள் : நின்ற திருக்கோலம் ,கிழக்கே திருமுக மண்டலம்
உற்சவர் : மாயக்கூத்தர்
தாயார் : குளந்தைவல்லித்தாயார் அலமேலு மங்கைத்தாயார் என்ற இரண்டு உபய நாச்சியார்கள்
தீர்த்தம் : பெருங்குளம்
விமானம் : ஆனந்த நிலய விமானம்
பெருமாள் நெஞ்சில் கமலாதேவி இடம் பெற்றுள்ள திருக்காட்சியும் இங்கு காணலாம்.சோரனான (அஸ்மாசரன் மீது) நர்த்தனம் புரிந்ததால் இப்பெருமானுக்கு சோரநாதன் என்று திருநாமம் ஏற்பட்டது.நம்மாழ்வாரால் மட்டும் ஒரே ஒரு பாடலால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம்.
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Monday, July 2, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# 14 (அருள்மிகு சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்,திருக்கோவிலூர்) |
அருள்மிகு சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்,திருக்கோவிலூர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சிவபெருமான் அந்தகாசுரனை வதைத்த தலமே திருக்கோவிலூர்.திருக்கோவலூர் என்பது பழைய பெயர்.
கருவறையில் லிங்க ரூபமாய் அருள் புரிகிறார் சிவபெருமான் .அன்னை சிவானந்தவல்லி,பெரியநாயகி எனும் பெயர்களில் தனி சந்நிதியில் அருள் புரிகிறார் .வடபுறத்தில் துர்கையம்மனும் முன்னர் கணபதியும் அருள் புரிகின்றனர்.
சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் வாழ்ந்தவர்தான் 63 நாயன்மார்களில் ஒருவரான மெய்பொருள் நாயனார்.தன் உயிர் போகும் நிலையிலும் தன்னை தாக்கியவர் சிவனடியார் வடிவிலிருந்ததால் அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்துவிட்டு,அந்த செய்தியை கேட்ட பின்னரே சிவனோடு கலந்த மெய்பொருள் நாயனாரின் ஜீவ சமாதி அம்பாள் சந்நிதிக்கு தெற்கே அமைந்துள்ளது.
இத்தகு சிறப்பு கொண்ட திருக்கோவிலூர் விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை நதிக்கரையில் உள்ளது.
மேலும் ஸ்தலபுராணம் மற்றும் இத்தலத்தை ப்ற்றி கேட்க
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
அருள்மிகு சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்,திருக்கோவிலூர்
Wednesday, June 6, 2007
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட்# 13 (அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் திருக்கோவில்,ஆம்புர் ) |

அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் திருக்கோவில்,ஆம்புர் கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
இந்த ஆலயத்தில் குடிகொண்டு இருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிகள் சுயம்பு ஆஞ்சநேயராக சுமார் 11 அடி உயரம் கொண்டு அருங்காட்சி அளித்து வருகின்றார்.ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிகள் தெற்கு நோக்கி இருந்தாலும் கிழக்கு நோக்கி பார்வை செலுத்தி வருகின்றார்
1489 ஆம் ஆண்டு விஜய நகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் நமது நாட்டை ஆண்ட போது பலிஜா சமூகத்தினரின் அன்பான வேண்டுகோளை ஏற்று இந்த ஆலயத்தை புதுப்பித்ததாக ஆலய கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
சனீஸ்வரனை தன் கால்களால் மிதித்து ஆணவத்தை அழித்த புண்ணிய ஸ்தலம் தான் ஆம்புர்
பெரிய ஆஞ்சநேயர் திருக்கோவில்.
அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் ஒரு கால் பதித்த இடம் இதுவென்றும் மற்றொரு கால் பதித்த
இடம் ஆம்புர் நகரின் அருகே உள்ளே ஆனைமேடு என்று புராணம் கூறுகிறது.
மேலும் ஸ்தலபுராணம் மற்றும் இத்தலத்தை ப்ற்றி கேட்க
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்