அருள்மிகு லலிதாம்பிகை திருக்கோவில், திருமீயச்சூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் திருமீயச்சூர் உள்ளது.
இறைவன்: அருணேஸ்வரர்
இறைவி: லலிதாம்பிகை, சாந்தநாயகி
தீர்த்தம் : சூர்ய தீர்த்தம்
தற்போதைய பெயர் : மீயச்சூர்
காசிப முனிவரின் மகனான அருணனை வஞ்சித்த சூரியன் ,தனது சாபம் தீருவதற்காக மீயச்சூர் வந்து இறைவனை வழிபட்டான். வெகுகாலம் ஆகியும் தனது சாபம் தீராததால் வருத்தத்துடன் " ஹே மிகுரா" என கதறிய போது ஏகாங்தத்தில் இருந்த தேவி கோபமுற , இறைவன் சாந்தப்படுத்துகிறார். சாந்தமடைந்த அன்னை பராசக்தியின் வாயிலிருந்து வசினி என்ற வாக்தேவதைகள் தோன்றி திருவாய் மலர்ந்தருளியதே லலிதா சகஸ்ரநாமம் ஆகும்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, August 24, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #74 அருள்மிகு லலிதாம்பிகை திருக்கோவில், திருமீயச்சூர் |
Monday, August 11, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #72 அருள்மிகு துர்காம்பிகை திருக்கோவில், பட்டீஸ்வரம் |
அருள்மிகு துர்காம்பிகை திருக்கோவில், பட்டீஸ்வரம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணதிற்குத் தென்மேற்கில் எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் பட்டீஸ்வரம் இருக்கிறது.
இறைவன்: பட்டீஸ்வரன்,தேனுபுரீஸ்வரர்
இறைவி: ஞானாம்பிகை
தீர்த்தம் : கோடி தீர்த்தம்
தற்போதைய பெயர் : பட்டீஸ்வரம் (பழையாறை)
இராவணனைக் கொன்றதால் இராமபிரானுக்கு மூன்று தோஷங்கள் ஏற்படுகின்றன். அதில் மூன்றாவது தோஷமான சாயஹத்தி தோஷத்தை போக்குவதற்காக பட்டீஸ்வரத்தில் சிவலிங்கத்தை (இராம லிங்கம்) பிரதிஷ்டை செய்து வழிபட்டார். மேலும் தேவி பராசக்தி தனித்து தவமிருந்தபோது காமதேனு தனது புத்திரி பட்டியை தேவிக்கு உதவியாக அனுப்பியிருந்தது. பட்டி சிவலிங்கத்தை தூய்மையான பாலால் நீராட்டி வழிபட்டது. பட்டி வழிபட்டதால் இறைவன் பட்டீஸ்வரன் என்றும் ,தலம் பட்டீஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது. மேலும் திருஞானசம்பந்தரின் முத்துப் பந்தல் குறித்து கேட்க ஆடியோவைக் கேட்கவும்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, July 6, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #67 அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில், திருக்கொள்ளம்புதூர் |
அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில், திருக்கொள்ளம்புதூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
தஞ்சாவூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் கொரடாசேரிக்கு அருகில் உள்ளது திருக்கொள்ளம்புதூர் .கும்பகோணம் - கொரடாசேரி பேருந்து பாதையில் செல்லூரில் இறங்கியும் இத்தலத்திற்கு செல்லலாம்.
இறைவன்: வில்வவனநாதர்
இறைவி: அழகிய நாச்சியர்
தீர்த்தம் : அகத்திய தீர்த்தம் , பிரம்ம தீர்த்தம் ,அர்ச்சுன தீர்த்தம்
தலமரம் : வில்வம்
தற்போதைய பெயர் : கொள்ளம்புதூர்
பாண்டவர்கள் வனவாசம் செய்து கொண்டிருந்தபோது , கௌமிய முனிவரின் அறிவுரைப்படி அர்ச்சுனன் இத்தலத்து இறைவனை வணங்கி வழிப்பட்டு பசுபதாஸ்திரம் பெற்றான். பல சிவாலயங்களை தரிசித்துக் கொண்டு திருக்கொள்ளம்புதூருக்கு வந்த போது திருஞானசம்பந்தர் , வெள்ளத்தின் காரணமாக ஓடக்காரர்கள் இல்லாமல்,துடுப்பு இல்லாமல் ஓடத்தில் அமர்ந்து "கொட்டமே கமழும்" என்ற பதிகத்தைப்பாடி அக்கரை வந்து சேர்ந்து இறைவனை தரிசித்தார்.இதனால் முள்ளியாற்றுக்கு இப்பகுதியில் "ஓடம் போக்கி ஆறு" என்ற பெயர் ஏற்பட்டது
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில், திருக்கொள்ளம்புதூர்
Sunday, June 29, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #66 அருள்மிகு வீழிநாதர் திருக்கோவில், திருவீழிமிழலை |

அருள்மிகு வீழிநாதர் திருக்கோவில், திருவீழிமிழலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
திருவாரூர் மாவட்டத்தில் கொடவாசல் வட்டத்தில் பூந்தோட்டம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே பத்து கிலோமிட்டர் தொலைவில் உள்ளது இத்தலம்.
இறைவன்: வீழிநாதர், மாப்பிள்ளை சுவாமி
இறைவி: சுந்தர குஜாம்பிகை
தீர்த்தம் : விஷ்ணு தீர்த்தம் , பிரம்ம தீர்த்தம்
தலமரம் : பலா
தற்போதைய பெயர் : வீழிமிழலை
இறைவி தவம் இருந்து இறைவனை திருமணம் புரிந்து கொண்ட ஸ்தலம் என்பதால் ,திருமணம் ஆக வேண்டிய பெண்கள் கல்யாண சுந்தரரை வழிப்பட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இத்தலத்து இறைவனை பிரம்மன் வழிப்பட்டு படைக்கும் ஆற்றலை மீண்டும் பெற்றான். திருமால் சிவபெருமானிடமிருந்து ஜலந்திரனை அழிக்க உபயோகித்த சக்கரப்படையைப் பெறுவதற்க்காக இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி ஆயிரம் தாமரை மலர்களால் தினமும் பூஜித்து வந்தார். ஒருநாள் ஒரு மலர் குறைந்து காணப்பட்டது. பூஜை தடைபடாமல் இருக்க,உடனே தனது வலது கண்ணை இறைவன் திருவடியில் சமர்ப்பித்தார். திருமால் கண்மலர் சாத்தி வழிப்பட்ட இடம் தான் திருவீழிமிழலை.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 26 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, June 22, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #65 அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில், வடகுரங்காடுதுறை |
அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில், வடகுரங்காடுதுறை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி.மி தொலைவில் உள்ளது.
தற்போதய பெயர் : வடகுரங்காடுதுறை
இறைவன் : தயாநிதீஸ்வரர், குலைவணங்குநாதர்
இறைவி : ஜடா மகுட நாயகி
தலமரம் : தென்னை
தீர்த்தம் : வாலிதீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 12 மணி வரை, மாலை 5:30 மணிமுதல் 8 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலைசந்தி காலை 8 மணி; சாயங்காலம் - மாலை 6 மணி.
வாலியும்,சுக்ரீவனும் வழிப்பட்ட இரண்டு சிவஸ்தலங்கள் குரங்காடுதுறை என்ற பெயரில் இருக்கின்றன. திருவையாறு அருகே காவிரியின் வடகரையில் உள்ளதால் இத்தலம் வடகுரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது.போரில் தனது அறுந்த வாலை இத்தலத்து இறைவனை வழிப்பட்டு மீண்டும் வால் வளரும் பேறு பெற்றான்.கிட்டத்தட்ட 1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோபுரத்தில் வாலி இறைவனை வழிப்படும் சிற்பமும் ,ஈசன் கர்ப்பிணிப் பெண்ணுக்கு தென்னங்குலை வளைத்த சிற்பமும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில், வடகுரங்காடுதுறை
Sunday, June 8, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #63 அருள்மிகு பாதிரிவனேஸ்வரர் திருக்கோவில், திருஅவளிவநல்லூர் |
அருள்மிகு பாதிரிவனேஸ்வரர் திருக்கோவில், திருஅவளிவநல்லூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
தஞ்சாவூர் மாவட்டத்தில் வலங்கைமான் வட்டத்தில் உள்ளது திருஅவளிவநல்லூர். தஞ்சாவூர் நீடாமங்கலம் இருப்புப் பாதையில் உள்ள அம்மாபேட்டை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருஅவளிவ நல்லூர்.
இறைவன்: பாதிரிவனேஸ்வரர்,சாட்சிநாதர்,தம்பரிசுடையார்
இறைவி: சவுந்தர்ய நாயகி
தீர்த்தம் : சிவபுஷ்கரணி
தலமரம் : பாதிரி மரம்
தற்போதைய பெயர் : திருஅவளிவநல்லூர் (பாதிரி வனம்,புல்லாரண்யம்)
பஞ்சாரண்யத் தலங்களில் இரண்டாவதாகத் தரிசிக்க வேண்டியது திருஅவளிவநல்லூர். காலை சந்தி நேரமாகிய 8.30 முதல் 9.30 மணிக்குள் திருஅவளிவநல்லூரில் கோயில் கொண்டிருக்கும் சவுந்தர்ய நாயகி சமேத பாதிரிவனேஸ்வரரைத் தரிசிக்க வேண்டும்.மூலவர் சிவலிங்கத்தோடு இறைவனும் உமையம்மையும் காட்சிக் கொடுக்கும் அமைப்பை ஒரு சில சிவாலயங்களில் மட்டுமே காண முடியும். தை அமாவாசையன்று பாதிரிவனேஸ்வரர் பரிவார மூர்த்திகளுடன் சிவபுஷ்கரிணியில் தீர்த்தம் அருளும்போது பக்தர்களும் புனித நீராடி மகிழ்வது இப்போதும் வழக்கமாக இருக்கிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு பாதிரிவனேஸ்வரர் திருக்கோவில், திருஅவளிவநல்லூர்
Sunday, June 1, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #62 அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோவில், திலதர்ப்பணப்புரி |
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோவில், திலதர்ப்பணப்புரி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
மயிலாடுதுறை - திருவாரூர் பஸ் மார்க்கத்தில் பூந்தோட்டம் என்ற ஊரில் இறங்கி,அங்கிருந்து எரவாஞ்சேரி பஸ் மார்க்கத்தில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் திலதர்ப்பணப்புரி புண்ணியத்தலம் உள்ளது.
இறைவன்: முக்தீஸ்வரர்,மந்தாரவனேஸ்வரர்
இறைவி: சொர்ணவல்லி
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
தலமரம் : மந்தார மரம்
தற்போதைய பெயர் : திலதர்ப்பணப்புரி (திலதைப்பதி)
பித்ரு தலங்கள் இந்தியாவில் மொத்தம் ஏழு.காசி,திரிவேணி சங்கமம்,ராமேஸ்வரம்,ஸ்ரீ வாஞ்சியம்,திருவெண்காடு,கயா என்கிற ஆறோடு ஏழாவது சிறப்புத்தலம் திலதர்ப்பணப்புரி.ராமாயணத்தில்,சீதா பிராட்டியை ராவணன் கடத்திச் செல்லும் போது ஜடாயு பறவை வழிமறித்து சண்டை போட்டு வாளினால் வெட்டுப்பட்டு இறந்தது. இலங்கையை நோக்கி வரும் போது,திலத்தர்ப்பணப்புரிக்கு வந்த ராமபிரானும்,லட்சுமணனும் தங்கள் தந்தையான தசரத சக்ரவர்த்திக்கும்,தந்தைக்கு நிகராக நேசித்த ஜடாயு பறவைக்கும் திலதர்ப்பணப்புரியில் தர்ப்பணம் செய்து பிண்டம் இட்டனர்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோவில், திலதர்ப்பணப்புரி
Sunday, May 25, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #61 அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்,குரங்கணில்முட்டம் |

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்,குரங்கணில்முட்டம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : http://vaaramorualayam.blogspot.com
http://www.adhikaalai.com
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் பேருந்து பாதையில் தூசி என்ற ஊரையடைந்து,அங்கிருந்து இரண்டு கி.மி செல்ல வேண்டும்.
இறைவன்: வாலீஸ்வரர்,கொய்யாமலைநாதர்
இறைவி: இறையார் வளையம்மை,ஸ்ரீ பூரணகங்கணதாரணி
தீர்த்தம் : காக்கைத்தீர்த்தம்
தலமரம் : இலந்தை
தற்போதைய பெயர் : குரங்கணில்முட்டம்
வாலி குரங்கு வடிவிலும் ,இந்திரன் அணில் வடிவிலும் ,எமன் முட்டம் (காகம்) வடிவிலும் வாலீஸ்வரரை வழிப்பட்டதால் குரங்கு+அணில்+முட்டம்=குரங்கணில்முட்டம். கி.பி 637 -இல் மகேந்திரவர்ம பல்லவனால் இத்திருக்கோயில் கட்டப்பட்டது.மூலவர் மேற்கு பார்த்த சன்னதி.அம்பாள் தெற்கு பார்த்த சன்னதி.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்,குரங்கணில்முட்டம்
Sunday, May 4, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #58 அருள்மிகு மார்க்கசகாயேச்வரர் திருக்கோவில், மூவலூர் |
அருள்மிகு மார்க்கசகாயேச்வரர் திருக்கோவில், மூவலூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
மூவலூர் தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்திற்கு மேற்கே 2 மைல் தொலைவில் உள்ளது. மாயவரம் -குற்றாலம் பேருந்து பாதையில் இடதுபுறத்தில் இக்கோயில் கோபுரத்தைப் பார்க்கலாம்.
இறைவன்: மார்க்கசகாயேச்வரர் (வழித்துணைநாதர்)
இறைவி: சௌந்தர்ய நாயகி (அழகிய நாயகி)
தீர்த்தம் : துர்கா புஷ்கரிணி
தலமரம் :புன்னை
தற்போதைய பெயர் : மூவலூர் (மூவரூர்)
இக்கோயில் இறைவனை ருத்திரன்,அயன்,அரி மூவரும் வழிப்பட்டதால் ,இத்தலத்திற்கு "மூவரூர்" என்று பெயர் ஏற்ப்பட்டது.அப்பெய்ரே காலப்போக்கில் மூவலூர் என்றாகிவிட்டது.மஹிஷாசுரனை அழித்த துர்க்கை மறுபடியும் தனது அழகிய உருவத்தை இத்தலத்து இறைவனை வழிப்பட்டு பெற்றாள்.மேலும் இக்கோவிலில் அப்பனுக்கும் அம்மைக்கும் பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 6 நிமி 2 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு மார்க்கசகாயேச்வரர் திருக்கோவில், மூவலூர்
Sunday, April 27, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #57 அருள்மிகு தீபப்பிரகாசர் திருக்கோவில், திருத்தண்கா(தூப்புல்,காஞ்சி) |

அருள்மிகு தீபப்பிரகாசர் திருக்கோவில், திருத்தண்கா(தூப்புல்,காஞ்சி) பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
இத்தலம் காஞ்சிபுரத்தில் உள்ளது. சின்னகாஞ்சிபுரத்திலுள்ள வரதராஜப்பெருமாள் திருக்கோவிலிருந்து 2 மைல் தொலைவிலும், மற்றொரு திவ்ய தேசமான அட்டபுயக்கரத்திலிருந்து மேற்கே 1 மைல் தொலைவில் உள்ளது.
மூலவர் : தீபப்பிரகாசர் :விளக்கொளிப்பெருமாள் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார் : மரகதவல்லி
தீர்த்தம் : சரஸ்வதி தீர்த்தம்
விமானம் : ஸ்ரீகர விமானம்
தற்போதைய பெயர் : தூப்புல்
மஹாவிஷ்ணு பிரம்மன் செய்த யாகத்தை அழிக்க வந்த அக்னி ரூப அரக்கனை பெருமாள் தனது கையில் தீபம் போல் ஏந்தி யாகசாலைக்கு வெளிச்சம் நல்கினார்.தண்-குளிர்ச்சி ,கா-சோலை .குளிர்ச்சி பொருந்திய சோலையில் பிரம்மன் வேள்விச்சாலை அமைத்ததனால் திருத்தண்கா ஆயிற்று.இத்தலத்தில் தான் ஸ்ரீசுவாமி தேசிகன் அவதரித்தார்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு தீபப்பிரகாசர் திருக்கோவில், திருத்தண்கா(தூப்புல்,காஞ்சி)
Sunday, April 13, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #55 அருள்மிகு புருஷோத்தமன் திருக்கோவில், திருக்கரம்பனூர |

அருள்மிகு புருஷோத்தமன் திருக்கோவில், திருக்கரம்பனூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
திருக்கரம்பனூர் என்னும் உத்தமர் கோவில் திருச்சியிலிருந்து வடக்கே 5 மைல் தொலைவில் உள்ளது. ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் உள்ளது
மூலவர் : புருஷோத்தமன் ,புஜங்க சயனம் ,கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : பூர்ணவல்லி
தீர்த்தம் : கதம்ப தீர்த்தம்
விமானம் : உத்யோக விமானம்
தற்போதைய பெயர் : கரம்பனூர் (உத்தமர் கோவில்)
மும்மூர்த்திகளும் ஒரே கோவிலுள் எழுந்தருளியுள்ளதால் இது த்ரிமூர்த்தி தலம் ஆகும்.பிச்சையெடுத்து வந்த நிலையில் தனது பாத்திரம்(கபாலம்) நிறைந்த்தால் பிட்சாடன மூர்த்தியாக சிவன் எழுந்தருளியுள்ளார்.எனவே பிட்சாண்டார் கோவில் என்று ம்றுபெயரும் உண்டு.இந்த ஆலயத்தில் மகாமண்டபத்தில் பிரம்மனுக்கு உள்ள கோயிலில் சரஸ்வதி தேவி எழுந்தருளியுள்ளார்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 25 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு புருஷோத்தமன் திருக்கோவில், திருக்கரம்பனூர்
Sunday, April 6, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #54 அருள்மிகு விண்ணகரப்பெருமாள் திருக்கோவில், நாதன்கோவில் |
அருள்மிகு விண்ணகரப்பெருமாள் திருக்கோவில், நாதன்கோவில் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
நாதன்கோவில் கும்பகோணத்திலிருந்து 3 மைல் தொலைவில் உள்ளது. இங்கு தங்கும் வசதிகள் இல்லை. கும்பகோணத்திலிருந்து கொருக்கை என்னும் ஊருக்கு வந்து அங்கிருந்து 11/2 மைல் நடந்தும் இத்தலத்தை அடையலாம்.
மூலவர் : விண்ணகரப் பெருமாள்,யோக ஸ்ரீநிவாசன்
தாயார் : செண்பகவல்லி
உற்சவர் : ஜெகந்நாதன்
தீர்த்தம் : நந்தி தீர்த்த புஷ்கரிணி
விமானம் : மந்தார விமானம்
தற்போதைய பெயர் : நாதன்கோவில் (திருநந்திபுர விண்ணகரம்)
மஹாவிஷ்ணுவின் திருமார்பில் தான் வாசம் செய்ய வேண்டும் என தேவி திருப்பாற்கடலிலிருந்து புறப்பட்டு,செண்பகாரண்யம் என்னும் இந்த இடத்தில் கடுந்தவம் செய்ய, ஐப்பசி மாதம் சுக்கில பட்ச வெள்ளிக்கிழமையன்று தேவிக்கு தரிசனம் தந்து தன்னுடைய நெஞ்சில் ஏற்றுக் கொண்டார்.மன்னார்குடியிலிருந்து நாதன் கோவில் வரை உள்ள பகுதியை செண்பகாரண்யம் என்று அழைப்பர்.இந்த ஊர் காளமேகப் புலவரின் பிறப்பிடம்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 41 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு விண்ணகரப்பெருமாள் திருக்கோவில், நாதன்கோவில்
Sunday, March 30, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #53 அருள்மிகு கோலவில்லிராமன் திருக்கோவில், திருவெள்ளியங்குடி |

அருள்மிகு கோலவில்லிராமன் திருக்கோவில், திருவெள்ளியங்குடி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
வெள்ளியங்குடி கும்பகோணத்திலிருந்து 20 மைல் தொலைவில் உள்ளது. இங்கு தங்கும் வசதிகள் இல்லை. கும்பகோணத்திலிருந்தோ அல்லது ஆடுதுறையிலிருந்தோ தங்கியிருந்து இத்தலம் வந்து செல்லலாம்.
மூலவர் : கோலவில்லிராமன்
தாயார் : மரகதவல்லி
உற்சவர் : சிருங்கார சுந்தரன்
தீர்த்தம் : சுக்ர தீர்த்தம்
விமானம் : புஷ்கலா வர்த்தக விமானம்
தற்போதைய பெயர் : வெள்ளியங்குடி
மஹாவிஷ்ணு வாமன அவதாரம் கொண்டு மாவலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்க ,அசுர குல குருவான சுக்ர பகவான் ,மன்னனை காப்பாற்ற தாரை வார்க்கும் செப்புக் குடத்தை ஒரு பூச்சியாக உருவெடுத்து அடைக்க ,பெருமாள் ஒரு சிறு குச்சியால் துவாரம் வழியாக குத்த,ஒரு கண்ணிழந்து ஒற்றை கண்ணன் ஆகிறான் சுக்கிரன்.இழந்த நேத்திரத்தை சுக்கிரன் இவ்விடத்து தவமிருந்து பெற்றதால் இவ்ர் பெயராலேயே வெள்ளியங்குடியென அழைக்கப்படுகிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு கோலவில்லிராமன் திருக்கோவில், திருவெள்ளியங்குடி
Sunday, March 23, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #52 அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோவில், திருவழுந்தூர் |

அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோவில், திருவழுந்தூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
திருவழுந்தூர் தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ளது.
மூலவர் : தேவாதிராஜன்
தாயார் : செங்கமல வல்லி
உற்சவர் : ஆமருவியப்பன்
தீர்த்தம் : தர்சன புஷ்கரிணி
விமானம் : கருடவிமானம்
தற்போதைய பெயர் : திருவழுந்தூர் (தேரழுந்தூர்)
கவிச் சக்ரவர்த்தி கம்பன் பிறந்தது இத்தலத்தில் தான்.கம்பன் மேடு என்றழைக்கப்படும் பகுதியே கம்பன் வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது.மார்க்கண்டேயர் இத்தலத்து பெருமாளை சேவித்து மோட்சம் பெற்றார்.கோகுலத்து கண்ணன் பிரம்மாவின் விருப்பத்திற்கிணங்க தேரழந்தூரில் "ஆமருவி நிரை மேய்க்கும் அமரர் கோமானாக" வந்தமர்ந்தார் என்பது வரலாறு.திருமங்கையாழ்வார் 45 பாசுரங்களில் பாடித்துதித்துள்ளார்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, March 16, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #51அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோவில், திருவெள்ளறை |

அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோவில், திருவெள்ளறை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
திருவெள்ளறை திருச்சியிலிருந்து 13 மைல் தொலைவில் துறையூர் செல்லும் பாதையில் உள்ளது.
மூலவர் : புண்டரீகாட்சன் ,நின்ற திருக்கோலம் ,கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : செண்பக வல்லி , பங்கயச் செல்வி
உற்சவர் : பங்கயச் செல்வி
தீர்த்தம் : 7 தீர்த்தங்கள்
விமானம் : விமலாக்ருத விமானம்
தற்போதைய பெயர் : திருவெள்ளறை
ஸ்ரீரங்கத்திற்கும் முந்தைய இதன் தொன்மையை குறிக்கவே ஆதிவெள்ளறை என இது அழைக்கப்படுகிறது.சிபிச் சக்ரவர்த்திக்கும்,மார்க்கண்டேயருக்கும் வெள்ளைப் பன்றியின் மூலமாக(வராஹ) புற்றிலிருந்து தோன்றி காட்சியளித்ததாக வரலாறு கூறுகிறது. இத்திருக்கோவிலுக்கு அருகிலுள்ள நீலிவனம் கிராமத்தில் சிவன் தன் கையில் ஒட்டிக் கொண்டிருந்த கபாலம் நீங்குவதற்காக இப்பெருமானை வழிப்பட்டதாகவும் வரலாறு தெரிவிக்கின்றன. இராமானுஜர் சிலகாலம் வாசம் செய்த ஸ்தலம்.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோவில், திருவெள்ளறை
Sunday, February 24, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #48-அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில், திருக்கச்சூர் |
அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில், திருக்கச்சூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
சிங்கபெருமாள் கோவிலிருந்து ஸ்ரீபெரும்புத்தூர் செல்லும் வழியில் 2 கி.மி தொலைவில் உள்ளது.
இறைவன்: கச்சபேஸ்வரர்
இறைவி: அஞ்சனாட்சாம்பிகை
தீர்த்தம் : விருந்து தீர்த்தம் ,கூர்ம தீர்த்தம்
தலமரம் : ஆலமரம்
தற்போதைய பெயர் : திருக்கச்சூர்
தரிசன நேரம் : காலை 7 மணி முதல் 10 மணி வரை ,மாலை 6 மணி முதல் 8 மணி வரை
ஆமை (கச்சபம் ) வடிவில் பெருமாள் சிவபெருமானை இத்தலத்தில் வழிப்பட்டதால் இத்தலம் கச்சூர் எனவும்,சிவபெருமானுக்கு கச்சபேஸ்வரர் எனவும் திருப்பெயர் வழங்கலாயிற்று. இத்தலத்தில் சுந்தரருக்கு இறைவனே அந்தணன் உருவில் வந்து திருக்கச்சூர் வீடுகளில் இருந்து அன்னம் கொண்டு வந்து பசியாற்றினார்.இத்திருக்கோவிலில் "விருந்திட்ட ஈஸ்வரர்" என இலங்கமூர்த்தி தனிக் கோவிலில் உள்ளார்.இத்தலத்து பெருமானை வழிப்பட்டால் இல்லத்தில் அன்னத்திற்கு குறைவிருக்காது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில், திருக்கச்சூர்
Sunday, February 17, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #47-அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில், திருமுல்லைவாயில் |

அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில், திருமுல்லைவாயில் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
ஆவடியிலிருந்து பேருந்து வசதியுண்டு.ஆவடிக்கும் பாடிக்கும் நடுவில் உள்ளது.
இறைவன்: மாசிலாமணீஸ்வரர்,முல்லைவனநாதர்
இறைவி: கொடியிடைநாயகி,லதாமத்யாம்பாள்
தீர்த்தம் : கல்யாண தீர்த்தம்
தலமரம் :முல்லை
தற்போதைய பெயர் : திருமுல்லைவாயில்
தொண்டைமான் யானையின் காலில் முல்லைக் கொடிகள் சுற்றிக் கொள்ள,அதை உடைவாளால் வெட்ட, முல்லைக் கொடியின் கீழ் இறைவன் வெளிப்பட்டதால் இத்தலத்திற்கு திருமுல்லைவாயில் எனப்பட்டது.
வசீஷ்டர் மாசிலாமணீஸ்வரரை வேண்டி காமதேனுவைப் பெற்றார்.இவ்வாலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது.
பின்குறிப்பு: மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில் செல்லும் வழியில் பச்சையம்மன் திருக்கோவில் உள்ளது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோவில், திருவலிதாயம்
Sunday, February 10, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #46-அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோவில், திருவலிதாயம் |
அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோவில், திருவலிதாயம் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
ஆவடி,சென்னை சாலையில் பாடி-டி.வி.ஸ் லூகாஸ் பேருந்து நிருத்தத்தில் இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்.
இறைவன்: திருவல்லீஸ்வரர்,வ்லியநாதர்
இறைவி: ஜகதாம்பாள்,தாயம்மை
தீர்த்தம் : வலிய தீர்த்தம்
தலமரம் :பாதிரி
தற்போதைய பெயர் : பாடி
பரத்வாஜ முனிவர் வலியனாக (கருங்குருவியாக) மாறி இத்தலத்தில் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றார்.படைவீரர்கள் தங்கும் இடத்தைப் பாடி எனக் குறிப்பிடுவர்.இத்தலம் இந்திரப்புரி,பிரம்மபுரி,வன்னிபுரம்,ஆதித்தபுரம் எனப் பலப் பெயர்களால் போற்றப்படுகின்றது.வியாழபகவான் இங்கு வந்து இத்தலத்து இறைவனை வழிப்பட்டமையால் இத்தலம் குருத்தலம் ஆனது.தட்சினாமூர்த்தியைத் தரிசிப்பது இங்குச் சிறப்பு.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோவில், திருவலிதாயம்
Sunday, February 3, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #45-அருள்மிகு வாலீஸ்வரர் ஆலயம், திருக்காரிக்கரை |

அருள்மிகு வாலீஸ்வரர் ஆலயம், திருக்காரிக்கரை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கப்படும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
சென்னை புத்தூர் நெடுஞ்சாலையில் நாகலாபுரம் - பிச்சாட்டூர் இடையில் உள்ளது.திருவள்ளூரிலிருந்து சுமார் 50 கிமி தொலைவில் உள்ளது.திருவள்ளூரிலிருந்து பேருந்து வழியாகச் சென்றால் ஊத்துக்கோட்டை,நாகளாபுரம் ஊர்களுக்கு அடுத்து திருக்காரிக்கரை வரும்.
தற்போதய பெயர் : ராமகிரி
இறைவன் : வாலீஸ்வரர்
இறைவி : மரகதாம்பிகை
தலமரம் : அரசமரம்
தீர்த்தம் : நந்திதீர்த்தம்
பதிகம் : திருந்ஞானசம்பந்த சுவாமிகள்,திருநாவுக்கரசு சுவாமிகள்
தரிசன நேரம் : காலை 8 மணிமுதல் 11மணி வரை, மாலை 3 மணிமுதல் 6 மணி வரை.
பூசைக்காலங்கள்: காலை 7 மணி
ராமருக்காக அனுமன் கொண்டுவந்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாலும்,மடுவை மலையாக (கிரியாக) மாற்றியதாலும் காளிங்க-மடுகரை -திருக்காரிக்கரை என மாறியது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 40 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
Sunday, January 27, 2008
| [+/-] |
தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #44-அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோவில், திருப்பேர்நகர் |
அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோவில், திருப்பேர்நகர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
Visit : vaaramorualayam.blogspot.com
www.adhikaalai.com
திருப்பேர்நகர் என்றால் யாருக்கும் தெரியாது.கோவிலடி என்று சொன்னாலே எல்லோருக்கும் தெரியும்.இத்தலம் திருச்சியிலிருந்து 15 மைல் தொலைவில் உள்ளது.
மூலவர் : அப்பக்குடத்தான்
தாயார் : இந்திராதேவி
தீர்த்தம் : இந்திர தீர்த்தம்
விமானம் : இந்திர விமானம்
தற்போதைய பெயர் : கோவிலடி
இத்தலம் மிகவும் பழமையானது,ஸ்ரீரெங்கத்திற்கு முன்னதாக ஏற்பட்டதென்றும்,அதனால் தான் கோவிலடி அதாவது ஸ்ரீரெங்கம் கோவிலுக்கு ஆதியாக அடியெடுத்துக் கொடுத்த
ஸ்தலமென்பதால் கோவிலடி எனப் பெயர் பெற்றதாக வரலாறு கூறுகிறது.நம்மாழ்வார் இப்பெருமானை பாடிவிட்டுத்தான் மோட்சத்திற்குச் சென்றார்.இங்கு பெருமானுக்கு தினந்தோறும் இரவில் அப்பம் அமுது செய்துப் படைக்கப்படுகிறது.
மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :
ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி
எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்
எம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்
டவுன்லோட் அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோவில், திருப்பேர்நகர்